அசீம் கேட்ட "அந்த” பொருள் பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்த ஷெரினா.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஷெரினா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே எவிக்டாகி மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ஷெரினாவிடம் அசீம் காண்டம் கேட்டார் என்று வதந்திகள் பரவி வந்து கொண்டதற்கு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் அசீம் கேட்ட வார்த்தைக்கு பீப் சத்தம் கொடுத்ததால் வெளியே தவறாக பரப்பப்பட்டு வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
உண்மையில் அசீம் ஷெரினாவிடம் சிகரெட் தான் கேட்டார் என்று அவர் கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது.
எல்லாமே முடிந்த பிறகு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய போட்டியாளர்கள்.. கடைசியில் கூறிய அந்த வார்த்தை
நெட்டிசன்களின் கருத்து
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. நாளை இந்த நிகழ்ச்சியை முடிவடைய இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார்கள் என்று பரபரப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடைசி மூன்று போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அசீம் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அசீம் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சனை என்று வந்துவிட்டால் மரியாதை கொடுக்காமல் பேசிவிடுவார். தர குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவார் என்றெல்லாம் அவரைக் குறித்து ரசிகர்கள் குறை கூறி வருகிறார்கள்.
ஷெரினாவின் பதில்
இந்த நிலையில் அசீம் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருந்து எவிக்டாகி வெளியே சென்று இருந்த ஷெரினா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது அவரிடம் ஒரு பாய் பிரண்டை பார்க்க வரும் போது காண்டம் கொண்டு வரமாட்டியா? என்று கேட்டார் என்றும், அதில் "கா" என்ற வார்த்தை மட்டும் தான் கேட்கிறது. மீதமுள்ள வார்த்தை பீப் சவுண்ட் போட்டு மறைத்திருக்கிறார்கள் என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் வீடியோக்களை பரவ விட்டு வந்தனர். இந்த நிலையில் வெளியே வந்த ஷெரினா முதல் முறையாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் கூறியதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
உண்மை இதுதானாம்
அதில் ஷெரினாவின் பெயரில் இருக்கும் ஐடியில் இருந்து அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறது. அதில் நீங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி ஆன போது அசீம் உங்ககிட்ட காண்டம் எடுத்துட்டு வரலையான்னு கேட்டாரா? அப்படி ஒரு செய்தி ஸ்பிரட் ஆகிட்டு இருக்கிறது. இது உண்மையா இல்லையா? என கேள்வி கேட்டிருக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஷெரினா இது உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார். உண்மையில் அசீம் சிகரெட் கொண்டு வரவில்லையா? என்று கேட்டார். ஆனால் கேர்ள் பிரண்ட் என்று சொன்னதுனால் தான் நான் காதை மூடினேன் என்று கூறியிருக்கிறார்.
தவறான குற்றச்சாட்டு
தற்போது இந்த ஸ்கிரீன்ஷாட்டை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அசீமிற்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஒருவர் உள்ளே இருக்கும்போது என்ன நடந்தது என்று தெரியாமல் இது அவர் மீது தவறான குற்றசாட்டுகளையும் வதந்திகளையும் பலர் பரப்பி வந்தனர். இதற்கு கமல்ஹாசன் சரியான பதிலை கூற வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு லைவ் நிகழ்ச்சி அதுவும் எத்தனையோ கேமரா பார்க்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் யாரும் இப்படி ஒரு வார்த்தையை கேட்க மாட்டார்கள் ஆனால் சமூக வலைத்தளத்தில் அசீமிற்க்கு எதிரான ரசிகர்கள் இப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார்கள். என்று ரசிமுடைய ரசிகர்கள் பதிவு வெளியிட்டு வருகிறார்கள்.