Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல் ஜனனியின் இன்னொரு முகம்..! இதுதான் அவருடைய நிஜமான கேரக்டராம்... லீக்கான புகைப்படங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி யாக நடிக்கும் மதுமிதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

சீரியலில் நடிப்பதெல்லாம் இவர் நடிப்பு மட்டும் தானாம், ஆனால் நிஜ கேரக்டரே வேறு மாதிரி என்று கூறியிருக்கிறார்.

அப்பா பேச்சே வேத வாக்கு என்று வாழ்ந்து வருபவர் ஜனனி ஆனால் அதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பவராம் மதுமிதா.

பெங்களூரு பொண்ணு

பெங்களூரு பொண்ணு

சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி, அதில் நடிகர்கள் நடிக்கும் கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்கள் அதுபோல தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவும் ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறார். இவர் பெங்களூருவை சேர்ந்த வராம் .அங்கே தான் கன்னட நடிகையாக நான்கு வருடங்கள் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர் தமிழில் சீரியலில் நடிக்க வேண்டும் என்று அதிகமாக ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தாராம்.

வெளியான புகைப்படம்

வெளியான புகைப்படம்

தமிழில் இவருக்கு முதல் முதலாக சன் டிவியில் அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் தன்னுடைய திறமையை காட்டி தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி யாக நடித்த ரசிகர்கள் இவரை அதே கேரக்டராகவே நிலை நிறுத்திக் கொண்டனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இவர் கையில் விளக்குகளை வைத்துக்கொண்டு நெற்றி முழுக்க திருநீறை அணிந்து பக்தி பழமாக காட்சி அளிக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது ஜனனியா என்று ஆச்சரியத்தோடு கேட்டு வருகிறார்கள்.

மதுமிதா வேற மாதிரி

மதுமிதா வேற மாதிரி

அதற்கு ஜனனி வேறு, மதுமிதா வேறு இது மதுமிதா. சீரியலில் பார்க்கும் ஜனனி நான் கொஞ்சம் கூட கிடையாது. அந்த சீரியலில் ஜனனி தன்னுடைய அப்பா பேச்சே வேத வாக்கு என்று அப்படியே அதற்காக வேலைகளை செய்து வருவார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய குடும்பத்திற்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் சிங்க பெண்ணாக இருந்து வருகிறார். தற்போது தான் தனக்கு எதிராக இருக்கும் குடும்பத்தை விட்டு அவர் பிரிந்து வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் மதுமிதா நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கூட அப்படி கிடையாது. தான் அப்பா சொன்னால் கேட்பேன். ஆனால் முழுதும் அப்படியே கேட்டு நடக்க மாட்டேன். நான் என் மனதில் தோன்றுவதை நான் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

வைராக்கியம் அதிகம் தான்

வைராக்கியம் அதிகம் தான்

அதோடு மதுமிதாவிற்கு தலைமுடியை கட்டையாக வெட்டிக்கொண்டு பெரிய பைக்குகளில் ஜாலியாக சுற்றுவது ரொம்பவே பிடிக்குமாம். அதுமட்டுமல்லாமல் யாராவது இவரிடம் இது உன்னால் பண்ண முடியாது என்று சொன்னால் அவர் அதை மனதில் அப்படியே நிறுத்தி விடுவாரா? உங்கள் முன்பு நான் அதை செய்தே விடுவேன் என்று இவர் விடாப்பிடியாக அதை செய்து முடித்தால்தான் திருப்தி அடைவாராம். அந்த அளவுக்கு வீம்பு பிடித்தவராம். அதுமட்டுமில்லாமல் இவர் நிஜ வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடித்தவர் தானாம். ஏனென்றால் இவர் இதற்கு முன்பு நடித்த ஒரு சீரியலில் இவர் நடிப்பு சரியாக இல்லை என்று ஒரு டைரக்டர் அடிக்கடி குறை கூறிக்கொண்டு இருந்தாராம். அதனால் அந்த சீரியலில் இருந்து மதுமிதா விலகி விட்டாராம். தன்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொண்ட மதுமிதா தற்போது நடித்து வரும் சீரியலின் ப்ரோமோவை பார்த்து அதே டைரக்டர் இவருக்கு உன்னுடைய நடிப்பு அழகாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+