எதிர்நீச்சல் சீரியல் சக்தியின் நிஜ மனைவி இவர்தானாம் .. மனைவியோடு மகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் சக்தி கேரக்டரில் நடக்கும் சபரியின் மனைவியின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
புதியதாக திருமணம் முடிந்திருக்கும் சபரி தன்னோடு மனைவியோடு மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டதும் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறதாம்.

முடிவு எடுக்க தெரியாத சக்தி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலமடைந்து வருகின்றனர் .அதில் சக்தி கேரக்டர் பலரும் திட்டி தீர்க்கும் ஒரு கேரக்டராக இருந்து வருகிறது. பலமுறை சொந்தமாக முடிவு எடுக்க முடியாமல் திணறிவரும் சக்தி பலமுறை அந்நியனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அண்ணன் பேச்சை கேட்டு ஜனனியோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் ஜனனியிடம் இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை புரிய வைத்து விடுவார். ஆனால் தற்போது இவர் அண்ணனின் முழு தம்பியாக மாறி ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

சக்தியின் தலை தீபாவளி
ஜனனியின் வெளியேற்றத்திற்கு காரணம் சக்தி தான் என்று ரசிகர்கள் பலரும் சக்தியின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியலில் நடிப்புக்காக தான் இவர் இப்படி நடித்து வருகிறார் என்பதை அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார். எதிர்நீச்சல் சக்தியின் நிஜ பெயர் சபரிதானாம். இவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருக்கிறது. தற்போது தலை தீபாவளியை கொண்டாடி முடித்திருந்த சபரி அப்போது எடுத்த ஒரு சில தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சியான பதிவுகள்
சீரியலில் ஜனனியோடு தல தீபாவளியை கொண்டாடாமல் இருந்த சக்தி நிஜ வாழ்க்கையில் அவருடைய உண்மையான மனைவியோடு தல தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்தான் உண்மையில் இவருடைய மனைவியா? என்று ஆச்சரியத்தோடு கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் சக்தியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலர் திட்டி தீர்த்து வந்தாலும் அது எல்லாம் தன்னுடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சபரி கூறி வருகிறார்.

பல வருட ஒற்றுமை
சபரியின் திருமணம் காதல் திருமணம் தானாம். இரு விட்டாரும் ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்பாதிக்காத நிலையில், இவர்களுக்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்ட பிறகு ,இரு வீட்டினரும் இவர்களைப் புரிந்து கொண்டு உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது என்று கூறி இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சபரி சத்தியாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் அதிகமான வெற்றிகள் பெற வேண்டும் என்று அவருடைய மனைவி கூறி இருக்கிறார்.
-
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications