ஷாக்! பிரியாணி சாப்பிட்டு பலியானதாக கூறப்பட்ட மாணவி.. ஆனால் போஸ்ட்மார்ட்டமில் ட்விஸ்ட்.. என்ன இது?
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரியாணி சாப்பிட்டு இறந்ததாக கூறப்பட்ட மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதில், பிரியாணி சாப்பிட்டதால் மாணவி உயிரிழக்கவில்லை என்றும், எலி பேஸ்ட் தின்று அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 'தற்கொலை' எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பிரியாணி சாப்பிட்ட மாணவி
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி காசர்கோட்டில் உள்ள 'ரோமன்சியா' என்ற உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். குழிமந்தி என அழைக்கப்படும் அந்த பிரியாணியை சாப்பிட்ட அவருக்கு, சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரியாணி சாப்பிட்டதால்தான் அவர் உயிரிழந்ததாக மாணவியின் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் பரவிய அச்சம்
இதன் தொடர்ச்சியாக, பிரியாணி சாப்பிட்டதால் இளம்பெண் மரணம் அடைந்ததாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனால் கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பிரியாணி மீது ஒருவித அச்சம் பரவத் தொடங்கியது. இதனிடையே, இளம்பெண் பிரியாணி வாங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இருவை போலீஸார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், கேரளா முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

பரபர 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்
இந்நிலையில்தான், அஞ்சு பார்வதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்று காலை வெளியானது. அதில், பிரியாணியில் உள்ள மூலப்பொருட்களாலும், இறைச்சியாலும் அஞ்சு பார்வதி உயிரிழக்கவில்லை என்றும், அந்த பிரியாணியில் கலந்திருந்த எலி பேஸ்ட் தான் அவரது மரணத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலி பேஸ்ட்டின் விஷம் அவரது கல்லீரலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
மேலும், அஞ்சு பார்வதியின் லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த சர்ச ஹிஸ்டரியை (search history) போலீஸார் ஆய்வு செய்த போது, அதில் எலி பேஸ்ட் குறித்து அஞ்சு பார்வதி தேடிப் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் பிரியாணி சாப்பிட்டு மரணம் அடையவில்லை என்பது இப்போதைக்கு தெளிவாகியுள்ளது. இந்நிலையில், அஞ்சு பார்வதி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications