தூக்கி போட்டு ஒரே மிதி! பஸ்ஸுக்குள் பின்னாலிருந்து உரசல்! குடிகார குப்பனை புரட்டியெடுத்த சிங்கப்பெண்
திருவனந்தபுரம் : கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே ஏறி மிதித்த பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.
Recommended Video
கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூரில் வசிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. பெண்களும் சொல்வதில்லை

பாலியல் தொல்லை
பெருநகரங்களில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் நிலைமையை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. நெரிசல் மிகுந்த பேருந்துகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு என்றே ஒரு கும்பல் சுற்றி திரிவது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது குறித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர்.

சீறிய பெண்
புகார் அளித்தால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் எனக் கருதி பெரும்பாலும் அவற்றை பெண்கள் வெளியே கூறுவது கிடையாது. இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே ஏறி மிதித்த பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.

சீறிய பெண்
புகார் அளித்தால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் எனக் கருதி பெரும்பாலும் அவற்றை பெண்கள் வெளியே கூறுவது கிடையாது. இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கிறது. இந்நிலையில் கேரளாவில் பேருந்துக்குள் போதையில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனை தனி ஆளாக நின்று நெஞ்சிலே எறி மித்த பெண் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.

போதையில் சில்மிஷம்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள படிஞ்ஞாறு துறை பகுதியில் இருந்து வேங்கபள்ளி என்னும் பகுதியில் செல்ல இருந்த தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து புறப்படும் நேரத்தில் இவர் அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இருந்துள்ளார். பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது இந்த பெண்ணிடம் இவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

சரமாரி தாக்குதல்
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத பெண் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்க பேருந்தில் இருந்து அவனை இறக்கி விட்டுள்ளனர். இறக்கி விட்ட பின்பும் அவன் வேறு சில சைகைகளை காட்டியதை தொடர்ந்து பேருந்தை நிறுத்தி வெளியே வந்த சந்தியா என்ற பெண் தனி ஆளாக நின்று நடுரோட்டில் போட்டு அவனை புரட்டி எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சந்தியாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications