வரலாற்று சிறப்புமிக்க முடிவு.. கேரளாவில் தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் தலித் எம்எல்ஏ.. முதல்முறை!
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்களை கட்டுப்படுத்தும் தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவையின் புதிய அமைச்சராக கே ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. கேரளாவில் எல்டிஎப் கூட்டணியில் மொத்தம் 21 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 12 அமைச்சர்கள் இதில் சிபிஎம் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது போக கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எப்படி
இதில் சிபிஎம் அமைச்சரவை தேர்வு பெரிய அளவில் வித்தியாசமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்கள், புதிய எம்எல்ஏக்கள், துடிப்பான களப்பணியாளர்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான புதிய எல்டிஎப் அரசில் சைலஜாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

வீணா
இவருக்கு பதிலாக வீணா ஜார்ஜ் புதிய சுகாதாரத்துறை அமைச்சராகிறார். கேரளாவில் இந்து கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்களை கட்டுப்படுத்தும் தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவையின் புதிய அமைச்சராக கே ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்த மூத்த சிபிஎம் எம்எல்ஏ ஆவார்.

முதல் முறை
தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவைக்கு முதல்முறையாக இப்படி தலித் சமூகத்தை சேர்ந்தவர் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் இது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்த பதவி தலித் சமூகத்தை சேர்ந்த யாருக்கும் கொடுக்கப்பட்டது இல்லை. நாயர் சமூகத்தின் மறைமுக அழுத்தம் காரணமாகவும், அவர்களின் என்எஸ்எஸ் அமைப்பின் மறைமுக அழுத்தம் காரணமாகவும் இந்த பதவி தலித் சமூகத்திற்கு வழங்கப்பட்டது இல்லை.

யார்
இதற்கு முன் இந்த தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவை பதவியை கடகம்பள்ளி சுரேந்திரன் வகித்து வந்தார். பினராயி விஜயன்தான் தற்போது கே ராதாகிருஷ்ணனுக்கு தற்போது இந்த அமைச்சரவை பதவியை ஒதுக்கி உள்ளார். 1996ல் கேர்ளாவில் சிபிஎம் முதல்வராக இருந்தம் இகே நய்யாரின் அமைச்சரவையில் கே ராதாகிருஷ்ணன் சிறுபாண்மைத்துறை அமைச்சராக இருந்தார்.

சபரிமலை
கேரளாவில் கடந்த 3 வருடமாக சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையும் விவகாரம் பெரிய பிரச்சனை ஆகி உள்ளது. இதை வைத்து பாஜக, காங்கிரஸ் இரண்டும் அங்கு அரசியல் செய்ய முயன்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தேவஸ்வோம் போர்ட் அமைச்சரவை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications