கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணிவரை 61% வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 மாவட்டங்களில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணிவரை 61% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கேரளாவில் இன்று முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

88,26,260 வாக்காளர்கள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 88,26,260 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இவர்களில் 46,68, 209 பேர் பெண் வாக்காளர்கள்; 70 பேர் 3-ம் பாலினத்தவர். முதல் கட்ட தேர்தலுக்காக 11,225 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட தேர்தல்
இன்றைய வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக டிசம்பர் 10-ந் தேதியன்று கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3-வது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும்.

கேரளாவில் மும்முனை போட்டி
3 கட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 34,710 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் ஆளும் இடது முன்னணி அரசு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பகலில் 50% வாக்கு பதிவு
ஆளும் இடதுமுன்னணி அரசு மீதான தங்க கடத்தல் வழக்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று பிற்பகல் 3 மணிவரை முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 61% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications