கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணிவரை 61% வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 மாவட்டங்களில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணிவரை 61% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கேரளாவில் இன்று முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

88,26,260 வாக்காளர்கள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 88,26,260 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இவர்களில் 46,68, 209 பேர் பெண் வாக்காளர்கள்; 70 பேர் 3-ம் பாலினத்தவர். முதல் கட்ட தேர்தலுக்காக 11,225 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட தேர்தல்
இன்றைய வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக டிசம்பர் 10-ந் தேதியன்று கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3-வது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும்.

கேரளாவில் மும்முனை போட்டி
3 கட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 34,710 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் ஆளும் இடது முன்னணி அரசு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பகலில் 50% வாக்கு பதிவு
ஆளும் இடதுமுன்னணி அரசு மீதான தங்க கடத்தல் வழக்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று பிற்பகல் 3 மணிவரை முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 61% வாக்குகள் பதிவாகி இருந்தன.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications