ஆங்கிலேயர் கால சிவப்பு பட்டை நீக்கம்.. இந்திய கடற்படைக்கு புதிய கொடி! அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஐஎன்எக்ஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி தொடர்ந்து இந்திய கடற்படைக்கான புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பலம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா தனது முப்படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்திய கடற்படையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பலை இணைக்க இந்தியா திட்டமிட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்க
அதன்படி, உள்நாட்டிலேயே இந்தக் கப்பல் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடைபெற்றது. 4 கட்டங்களாக நடந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தன.

நாட்டுக்கு அர்ப்பணித்தார்
இதையடுத்து விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் இன்று முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்பட்டது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படைக்காக புதிய கொடி ஒன்றையையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சிவப்பு பட்டைகள் நீக்கம்
இந்திய கடற்படைக்காக பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்த புதிய கொடியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிதாக அந்த கொடியில், மூவர்ண கொடியும், அசோக சின்னம், நங்கூரம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக புதிதாக பிரதமர் மோடி அறிமுகம் செய்த கொடியில், இடது மேல்புறத்தில் மூவர்ண கொடி உள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ்
நீல நிறத்தில் இடம் பெற்றுள்ள எண்கோண வடிவத்தில், நான்முக சிங்கம் மற்றும் நங்கூரம் மற்றும் ஒரு கேடயமும் உள்ளது. வலிமையான கடற்படையை கொண்டிருந்த மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியை பெருமைப்படுத்தும் வகையிலும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்டன் நிற பார்டர்களுடன் கூடிய எண்கோண வடிவம், சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

எல்லையை பாதுகாக்க வலிமையான கடற்படை
மகாரஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜி, வெளிநாட்டு படையெடுப்பு, போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயரிடம் இருந்தும் எல்லையை பாதுகாக்க வலிமையான கடற்படையை உருவாக்கி வைத்திருந்தார். சிவாஜி கடற்படையில் 60 போர்க்கப்பல்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களும் இருந்தனர். எனவே சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரையிலிருந்து எண்கோண வடிவம் எடுக்கப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications