ஆங்கிலேயர் கால சிவப்பு பட்டை நீக்கம்.. இந்திய கடற்படைக்கு புதிய கொடி! அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஐஎன்எக்ஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி தொடர்ந்து இந்திய கடற்படைக்கான புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பலம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா தனது முப்படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்திய கடற்படையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பலை இணைக்க இந்தியா திட்டமிட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்க
அதன்படி, உள்நாட்டிலேயே இந்தக் கப்பல் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது. இதன் தொடர்ச்சியாக 2009 ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த கட்டுமானப்பணிகள் முடித்து கடந்த ஆண்டு முதல் வெள்ளோட்டம் நடைபெற்றது. 4 கட்டங்களாக நடந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தன.

நாட்டுக்கு அர்ப்பணித்தார்
இதையடுத்து விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் இன்று முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்பட்டது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படைக்காக புதிய கொடி ஒன்றையையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சிவப்பு பட்டைகள் நீக்கம்
இந்திய கடற்படைக்காக பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்த புதிய கொடியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிதாக அந்த கொடியில், மூவர்ண கொடியும், அசோக சின்னம், நங்கூரம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக புதிதாக பிரதமர் மோடி அறிமுகம் செய்த கொடியில், இடது மேல்புறத்தில் மூவர்ண கொடி உள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ்
நீல நிறத்தில் இடம் பெற்றுள்ள எண்கோண வடிவத்தில், நான்முக சிங்கம் மற்றும் நங்கூரம் மற்றும் ஒரு கேடயமும் உள்ளது. வலிமையான கடற்படையை கொண்டிருந்த மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜியை பெருமைப்படுத்தும் வகையிலும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோல்டன் நிற பார்டர்களுடன் கூடிய எண்கோண வடிவம், சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

எல்லையை பாதுகாக்க வலிமையான கடற்படை
மகாரஷ்டிர மன்னர் சத்ரபதி சிவாஜி, வெளிநாட்டு படையெடுப்பு, போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயரிடம் இருந்தும் எல்லையை பாதுகாக்க வலிமையான கடற்படையை உருவாக்கி வைத்திருந்தார். சிவாஜி கடற்படையில் 60 போர்க்கப்பல்களும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களும் இருந்தனர். எனவே சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரையிலிருந்து எண்கோண வடிவம் எடுக்கப்பட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications