ஆச்சரியம், ஆனால் உண்மை! பைக் மீது மோதியதால் உயிர் தப்பிய கேரள சிறுவன்... எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சைக்கிள் மீது பைக் மோதியதால் தூக்கி வீசப்பட்ட சிறுவன் பின்னால் அதிவேகமாக வந்த பேருந்து மோதாமல் உயிர் தப்பினான்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிபரம்பா அருகே அமைந்து இருக்கிறது சொருக்காலா கிராமம். கடந்த 20 ஆம் தேதி மாலை 4 மணியளவில் இப்பகுதியில் உள்ள சாலையை சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை ஓட்டியபடி கடந்து செல்ல முயற்சித்தான்.

 Surprising, but true! Kerala boy survives collision with bike ... How do you know?

அப்போது அவ்வழியே வேகமாக வந்த பைக் சிறுவனின் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த சிறுவன் சாலையின் மறுபுறத்தில்போய் விழுந்தான். அவன் ஓட்டி வந்த சைக்கிள் பைக் மோதிய வேகத்தில் சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. அடுத்த நொடியே பின்னால் அதிக வேகமாக வந்த சிவப்பு நிற பேருந்து அந்த சைக்கிளின் மீது ஏறிச்சென்றது

ஆனால், தூக்கி வீசப்பட்ட சிறுவன் எந்த காயமும் இன்றி உடனடியாக எழுந்து நின்றான். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோவை பார்த்த பலர் ஒருவேளை சிறுவன் மீது பைக் மோதாவிட்டால், பின்னால் வந்த பேருந்து மோதி இருக்கும் என கருத்திட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+