Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க டிவிக்கு புது “ஓனர்” வந்துட்டாரு - என்டிடிவி செய்தியாளரிடம் ராகுல் பதில்.. அதானி மீது அட்டாக்

Subscribe to Oneindia Tamil

கேரளா: ஒற்றுமை யாத்திரையின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தன்னிடம் கேள்வி எழுப்பிய என்டிடிவி செய்தியாளிடம் உங்களுக்கு புதிய உரிமையாளர் கிடைத்துவிட்டார் என ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 14 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

கேரளாவில் யாத்திரை

கேரளாவில் யாத்திரை

இந்த நிலையில் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அவரது நடைபயணத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று யாத்திரையின்போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

என்டிடிவி செய்தியாளர்

என்டிடிவி செய்தியாளர்

அப்போது என்டிடிவி ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பினார். அவரிடம் ராகுல் காந்தி, "உங்களுக்கு புதிய உரிமையாளர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். பத்திரிகைகளின் உரிமையாளர் யார் என்பது முக்கியமல்ல. ஆனால், உரிமையாளர்கள்தான் பத்திரிகை என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்." என்றார்.

அதானி

அதானி

30 ஆண்டுகளாக செய்தி ஊடகத் துறையில் இயங்கி வரும் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியாக என்டிடிவி இருந்து வருகிறது. என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் இயங்கி வருகின்றன. பிரனாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் இந்த தொலைக்காட்சியை நடத்தி வரும் நிலையில் தொழிலதிபர் அதானி என்டிடிவியை வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது.

 என்டிடிவி விளக்கம்

என்டிடிவி விளக்கம்

இதுகுறித்து என்டிடிவி அளித்துள்ள விளத்தில், தொலைக்காட்சி நிறுவனர்களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. விசிபிஎல் நிறுவனம் எங்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எங்கள் இதயமான ஊடகத்துறையில் எதையும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பத்திரிகை துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61% பங்குகள் எங்கள் வசமே இருக்கிறது". என்று குறிப்பிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+