உங்க டிவிக்கு புது “ஓனர்” வந்துட்டாரு - என்டிடிவி செய்தியாளரிடம் ராகுல் பதில்.. அதானி மீது அட்டாக்
கேரளா: ஒற்றுமை யாத்திரையின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தன்னிடம் கேள்வி எழுப்பிய என்டிடிவி செய்தியாளிடம் உங்களுக்கு புதிய உரிமையாளர் கிடைத்துவிட்டார் என ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 14 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

கேரளாவில் யாத்திரை
இந்த நிலையில் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அவரது நடைபயணத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று யாத்திரையின்போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

என்டிடிவி செய்தியாளர்
அப்போது என்டிடிவி ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பினார். அவரிடம் ராகுல் காந்தி, "உங்களுக்கு புதிய உரிமையாளர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். பத்திரிகைகளின் உரிமையாளர் யார் என்பது முக்கியமல்ல. ஆனால், உரிமையாளர்கள்தான் பத்திரிகை என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள்." என்றார்.

அதானி
30 ஆண்டுகளாக செய்தி ஊடகத் துறையில் இயங்கி வரும் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியாக என்டிடிவி இருந்து வருகிறது. என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் இயங்கி வருகின்றன. பிரனாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் இந்த தொலைக்காட்சியை நடத்தி வரும் நிலையில் தொழிலதிபர் அதானி என்டிடிவியை வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது.

என்டிடிவி விளக்கம்
இதுகுறித்து என்டிடிவி அளித்துள்ள விளத்தில், தொலைக்காட்சி நிறுவனர்களின் ஒப்புதல் ஏதுமின்றி பங்குகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. விசிபிஎல் நிறுவனம் எங்களிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எங்கள் இதயமான ஊடகத்துறையில் எதையும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாங்கள் பத்திரிகை துறைக்காக பெருமையுடன் நிற்போம். 61% பங்குகள் எங்கள் வசமே இருக்கிறது". என்று குறிப்பிட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications