போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்ட சிஎஸ்கே ரசிகை.. ஆவேசமாக நடந்து கொண்டது ஏன்?
சென்னை: அஹமதாபாத்தில் ஐபிஎல் இறுதி போட்டியை காண சென்று சிஎஸ்கே பெண் ரசிகை ஒருவர் தனது அருகில் அமர்ந்த காவலரை கண்ணத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி அகமதாபத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. நேற்று அகமதாபாத்தில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலத்த மழை காரணமாக ஆடுகளத்தின் தன்மை மோசமாக இருந்த காரணத்தால், சிஎஸ்கே மற்றும் குஜராத் அணி கேப்டன்களிடம் கலந்து ஆலோசித்த ஐபிஎல் அணி நிர்வாகம் இறுதிப்போட்டியை நாளை அதாவது இன்று நடைபெறும் என்று ஒத்திவைத்தது. இதன் படிஇன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதப்போகின்றன.
முன்னதாக நேற்று மழை காரணமாக போட்டியை காண முடியாமல் மைதானத்திலேயே ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். மழை விடுவதாகவும் இல்லை. மழையால் மைதானம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மைதானத்தில் இருந்து ரசிகர்கள் போட்டியை காண முடியாததால் சோகத்துடன் வெளியேறினர்.

பலரும் ஐபிஎல் போட்டி முடிந்த உடன் சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் போட்டிருந்தனர். ஆனால் போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தால் பலரும் நொந்து போய் உள்ளனர். பல ரசிகர்கள் திடீரென போட்டி ரத்து செய்யப்பட்டதால் அஹமதாபாத் ரயில் நிலையத்திலேயே இரவு தூங்கினார்கள். இன்று அஹமதாபாத் ஸ்டேடியத்தின் வானிலை தெளிவாக இருந்தால் போட்டி நிச்சயம் நடைபெறும்.
Csk fans slapped and hit this male officer that was shameful#CSKvGT #IPLFinals pic.twitter.com/7cdLm3hmTN
— Priyanshu (@PriyanshuVK18K) May 28, 2023
இது ஒருபுறம் எனில் அஹமதாபாத்தில் ஐபிஎல் இறுதி போட்டியை காண சென்று சிஎஸ்கே பெண் ரசிகை ஒருவர் தனது அருகில் அமர்ந்த காவலரை கண்ணத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ்காரர் ஒருவர் பெண் ரசிகையின் அருகில் அமர்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ரசிகை கோபத்தில் போலீஸ்காரை கண்ணத்தில் அறைந்ததுடன் அவரை தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உங்ளது.












Click it and Unblock the Notifications