Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள்.. இப்படித்தான் ஸ்டாலின் ஜெயித்தாரா?”- நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தியில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டு போட்​டுத்​தான் ஸ்டா​லின் ஜெயித்தாரா? என்​றும் நிர்​மலா சீதா​ரா​மன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜி.எஸ்.டி குறைப்பால் மக்கள், வணிகர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி மாற்​றம் செய்​யப்​பட்​ட​தால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைந்​துள்​ளது.

Did Stalin Win by Fake Votes - Nirmala Sitharaman Claims 4379 Bogus Voters Found in Kolathur

தமிழ்நாட்டில் SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஆச்சர்யம் அளிக்கிறது. இதை பாஜக கொண்டு வந்தது போல் பேசுகின்றனர். 1952 ஆம் ஆண்டில் தொடங்கி 2005 ஆம் ஆண்டு வரை 13 முறை எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுள்ளது. இது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். என்ன சொல்கிறோம் என்று புரியாமல் பேசுகிறார். துணை முதல்​வர் உதயநிதி 'எஸ்​ஐஆர்' என்​றால் என்ன என தெரி​யாமல் 'ரி​விஷன்' என்​பதை 'ரெஸ்ட்​ரிக்ஷன்' என சொல்கிறார்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாகவும் இதை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது நம் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுக இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது இதை ஏன் எதிர்க்கவில்லை. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஒரே பெயரில் 3 வாக்காளர் அட்டை வைத்துள்ளனர். 933 வாக்​காளர்​கள் போலி முகவரி​யில் உள்​ளனர். இதையெல்லாம் வைத்துதான் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? திமுக தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இந்திய அரசியலமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.

பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்துள்ளது. ஆனால் ராகுல் காந்தி ஹரியானாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை பலம் இழக்க வைக்காதீர்கள். ஓட்டுரிமை யாருக்கும் போகாது. அனைத்து ஆவணங்களுக்கும் மாற்று ஆவணங்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கே பி.எல்.ஓ வருவார். கிராம மக்கள் அலைய வேண்டியதில்லை.

பீகாரில் 22 லட்​சம் வாக்​காளர்​கள் இறந்​தவர்​கள். இருப்​பினும் வாக்​காளர் பட்​டிய​லில் இடம்​பெற்​றுள்​ளனர். 7 லட்​சம் வாக்​காளர்​கள் ஒரு இடத்​தில் மட்​டுமின்றி மேலும் வேறு இடத்​தி​லும் பெயர் பதிவு செய்​துள்​ளனர். 35 லட்​சம் பேர் நிரந்​தர​மாக பீகாரை விட்டு வெளி​யேறி விட்​டோம் என கூறி​யுள்​ளனர். பீகாரில் மட்​டும் 64 லட்​சம் பேரின் பெயர் வாக்​காளர் பட்​டியலில் இருக்கக்கூடாது. அதற்குத்தான் தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை மேற்கொண்​டுள்​ளது." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+