டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையிலும் விவசாயிகள் போராட்டம்! இரவும் தொடர்கிறது
டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகளும் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கினர். இந்த போராட்டம் இரவிலும் தொடரும் என்று அறிவித்த
தஞ்சை: டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் வடகாடு, கோட்டைக்காடு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதால் தமிழகமே போராட்டக்களமாக உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசு ஓப்பந்தத்தில் நேற்று கையெழுத்தானது. இதனைக் கண்டித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தை தொடங்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும், தஞ்சை விவசாயிகளும் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை ஆட்சியர் அலுவலகம் செல்லும் நுழைவாயிலில் காவல் துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பிரதான சாலை ஓரத்தில் அமர்ந்து உடலில் இலைகளை கட்டிக் கொண்டு பட்டை போட்டுக் கொண்டு விவசாயிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்காண வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியுள்ளனர். போராட்டத்தை த.வெள்ளையன் தொடங்கி வைத்தார்.
தகவல் அறிந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் இவர்களுக்கு வலுசேர்க்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்வதில்லை என்று போராட்டக்குழுவினர் கூறியுள்ளதைத் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications