மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிலேயே கையை வெட்டிக் கொண்டார் எடப்பாடி.. போட்டுத்தாக்கும் ஸ்டாலின்!
மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையை வெட்டிக்கொண்டார் என ஸ்டாலினின் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை: மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையை வெட்டிக்கொண்டார் என ஸ்டாலினின் குற்றம்சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் குறித்து கேள்வி கேட்டுவிடுவோம் என்றே அச்சத்திலேயே அதிமுக அரசு, விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏக்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்க அப்பகுதி திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கரும் போனில் எம்எல்ஏக்களை அழைத்துள்ளார். ஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுகவினர் கொந்தளிப்பு
அன்று மாலையே எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

ஜனநாயகம் நோயாளியாக்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து கண்டன உரையாற்றிய ஸ்டாலின் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனநாயகம் நோயாளியாக்கப்பட்டுள்ளது என்றார். எம்எல்ஏக்களை கைது செய்தது திமுக மீது அதிமுக அரசிற்கு இருக்கும் பயத்தை காட்டுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.

திமுக ஆட்சியில் அடிக்கல்
பல மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.400 கோடி ஒதுக்கியது திமுகதான் என்றும் ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் அரசியல் அநாகரிகம்
அதிமுகவின் அரசியல் அநாகரிகத்தை எடுத்துச் சொல்லவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் ஸ்டாலின் கூறினார். விழாவில் திமுக எம்.எல்.ஏக்கள் உண்மையை அம்பலபடுத்தி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கையை வெட்டிக்கொண்டார் எடப்பாடி
மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிலேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையை வெட்டிக்கொண்டார் என ஸ்டாலினின் குற்றம்சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் குறித்து கேள்வி கேட்டுவிடுவோம் என்றே அச்சத்திலேயே அதிமுக அரசு, விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏக்களை கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

திமுக குரல் கொடுக்கும்
மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
எத்தனை முறை எம்எல்ஏக்களை கைது செய்தாலும் மக்கள் பிரச்னைக்கு திமுக குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஆற்றிய கண்டன உரையில் குறிப்பிட்டார்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications