தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது சோடா பாட்டில் வீச்சு: பரபரப்பு
மட்டக்களப்பு: இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது சோடா பாட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவநேசன் தலைமையிலான ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வாக்கு சேகரித்தபோது பிள்ளையான் குழுவினர் என்று சந்தேகிக்கப்படும் தவரெட்ணம் குழுவினர் சோடா பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் வாழைச்சேனை பேத்தாளையைச் சேர்ந்த இரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சிவநேசன் கூறுகையில்,
தேர்தல் தோல்வி பயம் காரணமாக ஜனநாயக ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபடும் எங்களது ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் குழுவினர் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து வாழைச்சேனை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், தவரெட்ணம் குழுவினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications