கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வால் பிக்சட் டெபாசிட் மீதும் கடன் வாங்கும் மக்கள்!
டெல்லி: இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய பருப்பில் இருந்து, குழம்பில் போடும் வெங்காயம் வரை விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது. உயர்ந்துள்ள விலைவாசியால் மக்கள் பிக்சட் டெபாசிட் என்னும் நிரந்தர வைப்புத் தொகையின் மீதும் கடன் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அது ஒருபுறமிருக்க விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில் தீபாவளி போன்ற விழாக்காலங்களின் அதிகரிப்பும் மக்களை பிக்சட் டெபாசிட் என்னும் நிரந்தர வைப்புத் தொகையின் மீது கடன் வாங்கும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வருகிறது.

கடந்த செப்டம்பரில் இருந்து பிக்சட் டெபாசிட் மீதான கடன்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
பீதி கிளப்பும் பிக்சட் டெபாசிட் கடன்கள்:
இந்த நிரந்தர வைப்புத் தொகை மீதான லோன்கள் மொத்த பிக்சட் டெபாசிட்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனவாம். எனினும், வாகன கடன் மிகவும் குறைந்துள்ளதாம்.
என்ன செய்ய விலைவாசி அப்படி:
இதுகுறித்து கனரா வங்கியின் அதிகாரி ஒருவர், "குறைந்த கால தேவைகளுக்கு டெபாசிட்டுகளை உடைக்க பயனாளர்கள் பெரும்பாலும் முன் வருவதில்லை. எனினும், உயர்ந்து வருகின்ற விலைவாசியால் இது போன்ற பிக்சட் டெபாசிட் மீதான விழாக்கால கடன்கள் அதிகரித்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
கன்னா பின்னா கிரெடிட் கார்டு கடன்கள்:
கிரெடிட் கார்டுகள் மீதான கடன்களும் 22 சதவீதமளவிக்கு அதிகரித்துள்ளனவாம். வீட்டுக் கடன்களும் 18 சதவீதமளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், விலைவாசி உயர்வால் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, பிக்சட் டெபாசிட் கடன்கள்தான் அதிகம் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கையில் நிற்காத சம்பளம்:
வரவுக்கு மிஞ்சிய செலவு நிலையே இந்த விலைவாசி உயர்வினால் நிலவி வருகின்றது. வாங்கும் சம்பளம் கையில் 10 நாட்கள் கூட நிற்பதில்லை என்னும் புலம்பல்தான் நடுத்தர வர்க்க மக்களிடையே அதிகமாக கேட்டு வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
கழுத்தை நெரிக்கும் விலைவாசி:
கைக்கெட்டா தூரத்தில் சாப்பிடும் பொருட்களின் விலைகளே உயர்ந்து நிற்கும் போது, கழுத்தை நெரிக்கும் கடன்களால் குடும்பங்களை ஒன்றிணைக்கும் பண்டிகைகளும் காற்றோடு கலந்து காணமலே போய் விடுகின்றன. தற்போது, எதிர்கால சேமிப்பிலும் கைவைக்கும் அளவிற்கு மக்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது விலைவாசி.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications