வாடிக்கையாளர்களுக்கு 200 கோடியை திருப்பி அளிக்கும் “ஆப்பிள்” நிறுவனம்
வாஷிங்டன்: உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது.
ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை அதன் "ஆப் ஸ்டோரில்" இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர்.
இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

பெற்றோர் புகார்:
அந்தப் புகாரில் குழந்தைகள் தங்களுடைய அனுமதியின்றி மென்பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர்.இதையடுத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை திருப்பித் தர நிறுவனம் ஒப்புக்கொண்டது.

வரம்பில்லா சேவை:
இந்த மொபைல் போன்களில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை பதிவு செய்தபின் 15 நிமிடங்களுக்கு யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த சமயத்தில் குழந்தைகள் வரம்பின்றி தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை வாங்க முடியும்.இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தெரிவிக்கவில்லை.

1 லட்ச ரூபாய் அப்ளிகேஷன்:
இந்த மொபைல் போனை பயன்படுத்தும் குழந்தைகள் "கிட்ஸ்" ஸ்டோரில் இருந்து 30 ஆயிரம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையுள்ள அப்ளிகேஷன்களை வாங்கியுள்ளனர். மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ள ஒரு பெண்மணி அவரது மகள் வாங்கிய விளையாட்டு அப்ளிகேஷனுக்காக 1.60 லட்சம் ரூபாய் செலவிட்டதாகக் கூறியுள்ளார்.

திருப்பி அளிக்கும் ஆப்பிள்:
"கடந்த ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப் ஸ்டோருக்காக ஏறக்குறைய மூன்று கோடி வாடிக்கையாளர்களுக்கு இமெயில் மற்றும் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்" என்று ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி டிம் குக் தெரிவித்து உள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications