ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், ரயில்வே கட்டமைப்புத் துறையில் 100 சதவீத அளவுக்கு அன்னிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காப்பீட்டுத் துறையில் 26 சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இரு வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளிலும் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

நாட்டின் 70 சதவீத ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில் அரசின் புதிய முடிவால் உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டமைப்பு நவீனமயமாக்கல், புதிய அதிவிரைவு ரயில்கள், சரக்குப் போக்குவரத்துக்கென சிறப்பு இருப்புப் பாதைத் தடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு போதிய நிதியாதாரம் இல்லாமல் ரயில்வே துறை திணறி வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதன்மூலம் ரயில்வே துறைக்குத் தேவையான நிதி கிடைக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்குள்பட்ட சிறார்களை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கும்வகையில் சிறார் சட்டத்தை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் நியமனத்துக்கு நீதிபதிகள் குழு பரிந்துரைக்கும் நடைமுறையை மாற்றி, தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவைக் கொண்டுவருவது குறித்து முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications