தங்க நகை மதிப்பில் 75% கடன் தர ரிசர்வ் வங்கி அனுமதி
டெல்லி: வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தங்க நகைகள் மீது அளிக்கும் கடனின் அளவுக்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. அதன்படி, தங்க நகையின் மதிப்பில் இனி 75 சதவீதம் வரை கடனாக அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நகையின் மதிப்பில் 60 சதவீதம் வரை மட்டுமே கடன் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இப்போது அதை தளர்த்தியுள்ளதன் மூலம், தங்க நகை மீது கடன் பெறுவோருக்கு கூடுதலாக 15 சதவீத தொகை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களில் தங்க நகை அடமானம் தருவதற்கு பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. கடன் தரும்போது, அடமானம் பெற்ற நகையின் தரம் (கேரட்), எடை ஆகியவைப் பற்றிய விவரத்தை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களது நிறுவன ஆவணத்தில் குறிப்பிட்டு வாடிக்கையாளருக்கு தரவேண்டும்:

5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளரிடம் இருந்து பான் கார்டு நகலை கேட்டு பெறவேண்டும், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெற்றால் ரொக்கமாகத் தராமல் காசோலையாக வழங்கவேண்டும்.
கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது எல்லாக் கிளை களிலும் ஒரே மாதிரி ஆவணங்கள் முறையைத்தான் பின்பற்றவேண்டும்: மேலும், அனைத்து வாடிக்கையாளர்களிடமும் கே.ஒய்.சி பெற வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆர்.பி.ஐ. அதேபோல நகையின் மதிப்பில் 60 சதவீதம் வரை மட்டுமே கடன் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications