ஆசிய-பசிபிக் நாடுகளிலேயே இந்திய ரூபாய் மதிப்புதான் வேகமாக முன்னேறுது
டெல்லி: இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்பதை கருத்தில்கொண்டு, பொருளாதாரத்தில் நிகழ்ந்த நேர்மறை மாற்றத்தால், ஆசிய பசிபிக் நாடுகளிலேயே இந்திய ரூபாய் மதிப்புதான் மிகவும் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிந்த வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.52-ஆக இருந்தது. இதன் மூலம்கடந்த ஒரு மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 5.3 சதவீதம் அதிகரித்து இந்த பிராந்தியத்தின் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெருமையை பெற்றது.
இந்தாண்டின் துவக்கத்தில் டாலருகுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.8ஆக இருந்தது. ஆண்டு தொடக்கத்தை ஒப்பிட்டால் இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு 327 பைசாக்கள் உயர்ந்துள்ளன. இதற்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளதும் ஒரு காரணம் என்றபோதிலும், அரசியல் மாற்றம், ரூபாய் மதிப்பு ஏற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக 68.80 என சரிந்த நிலையில், இப்போதைய முன்னேற்றம் சந்தை வல்லுநர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தோனேசியாவின் ருபியா 4.6 சதவீதமும், நியூசிலாந்து டாலர் 3.75 சதவீதமும், ஆஸ்திரேலிய கரன்சி 3.5 சதவீதமும் உயர்ந்துள்ளன.
ஜப்பான், தென் கொரியா, மலேசியா நாடுகளின் பண மதிப்பு 2 முதல் 3சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இப்பிராந்தியத்திலேயே அதிகபட்சமாக 5.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications