'அந்த' விளம்பரங்களை இனி கண்ட நேரத்தில் ஒளிபரப்ப கூடாது: டிவி சேனல்களுக்கு அரசு உத்தரவு
Recommended Video

டெல்லி: இனிமேல் கண்ட நேரத்தில் எல்லாம் 'காண்டம்' விளம்பரத்தை டிவியில் காட்ட முடியாது. மத்திய அரசு டிவி சேனல்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் அம்மா, அப்பா, பிள்ளை குட்டிகளோடு உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ஆணும், பெண்ணும் ஒரு சிறு பாக்கெட்டை கையில் பிடித்தபடி கட்டிலில் கட்டி உருளும் காட்சிகள் வெளியாகிறதா?
உங்களை அப்படியே ரிமோட் பக்கம் கையை கொண்டு செல்ல வைக்கிறதா?

அசடு வழிகிறது
இது ஏதோ உங்களுக்கு மட்டும் நடக்கும் நெளிய வைக்கும் நிகழ்வு கிடையாது. இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களின் பெரியவர்களும், சிறியவர்களும் இதுபோன்ற ஆணுறை விளம்பரங்களை பார்த்து அசடு வழியத்தான் உட்கார்ந்துள்ளனர்.

ஆணுறை விளம்பரங்கள்
இந்த நிலையை மாற்றத்தான் மத்திய அரசு புதிய நெறிமுறையை பிறப்பித்துள்ளது. டிவி சேனல்கள் இனிமேல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காட்ட முடியுமே தவிர, எல்லா நேரத்திலும் காண்பிக்க முடியாது.

இரவு மட்டுமே
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காண்பிக்க வேண்டும் என்று அரசு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சிறுவர்கள் கண்களில் இந்த விளம்பரங்கள் தென்பட கூடாது என்பதே நோக்கம்.

உத்தரவு
குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியமற்ற பழக்கங்களை அவர்கள் பின்பற்றுவதை தடுத்தல் ஆகிய விதிமுறைகளின்கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தாக்கம் ஏற்படும்
சிறு வயதிலேயே செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசும் கலாசாரம் நம்முடையது கிடையாது. எனவே, சிறுவர்கள் மனதில் இதுபோன்ற விளம்பரங்கள் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இப்படியொரு தடையை பிறப்பித்துள்ளதாக கூறுகிறார்கள் அரசு வட்டாரத்தில்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications