பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்.
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்.
சிங்கத்தி வேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்
சிங்கத்தி வேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்.
தோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்
சாவுஞ் சலிப்புமெனத் தான்பால் கணமுடையாள்
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
நுங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆக்கந்தா னாவாள்,அழிவுநிலை யாவாள்,
போக்குவர வெய்தும் புதுமையெலாந் தானாவாள்,
மாறி மாறிப் பின்னும் மாறிமாறிப் பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்.
ஆதிபராசக்தி - அவள் நெஞ்சம் வன்மையுறச்
சோதிக் கதிர் விடுக்கும் சூரியனாந் தெய்வத்தின்
முகத்தே இருள் படர-(தொடரும்)ஞீடிதி?>












Click it and Unblock the Notifications