பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் 04, 2001

Subramaniya Bharathi

சுயசரிதை

கடவுள் எங்கே இருக்கிறார்

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வன் - தூணி லுள்ளன்
நாரா யணன் துரும்பி லுள்ளான் என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை:
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ? (15)


கேளப்பா, சீடனே! கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்:
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்:
விண்மட்டும் கடவுளன்று எண்ணும் அஃதே. (16)


சுத்த அறி வேசிவமென் ரைத்தார் மேலோர்:
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்,
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்:
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்:
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்ததும் தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழத்து வீரே? (17)


உயிர்களெல்லாம் தெய்யவமன்றிப் பிறவொன்றுமில்லை:
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்:
பயிலுமுயிர் வகைமட்டு மின்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்:
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்கள் அனைத்தம் தெய்வம்:
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! (18)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+