For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
கோவிந்தன் பாட்டு
கண்ணிரண்டும் இமையாமல் செந்நிறத்து:
மெல்லி தழப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு சொற்பாத மனித்தருள்வாய்
சராசரத்து நாதா, நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிகப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே. (1)
மெல்லி தழப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு சொற்பாத மனித்தருள்வாய்
சராசரத்து நாதா, நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிகப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே. (1)
எளியனேன் யானெனலை எப்போது
போக்கிடுவாய், இறைவனே! இவ்
வளியினிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே, வரம்பில் வான
வெளியிலே, கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா! நினைக் கண்டு
நின்னொடுதான் கலப்ப தென்றோ? (2)
என் கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின் கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
வன் கண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்
புன் கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா,
எனக்கமுதம் புகட்டு வாயே. (3)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]