பாரதி பக்கம்
பிப்ரவரி 24, 2001
தேசிய கீதங்கள்
சுதந்திரப் பெருமை
திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ண மெட்டு)
1.வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்
வேறொன்று கொள்வாரே?- என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டோர் கள்ளில்
அறிவைச் செலுத்து வாரோ? (வீர)
2.புகழுதல் வறமுமே யன்றியெல் லாம்வெறும்
பொய்யென்று கண்டாரேல் - அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ? (வீர)
3.பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் - மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ? (வீர)
4.மானுட ஜென்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உண்ர்ந்தாரேல் - அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்பாடு மாறுளதோ? (வீர)
5.விண்ணி விரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ? (வீர)
6.மண்ணிவலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ? (வீர)
7.வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (வீர)