ம.பி. பென்ச் சரணாலயத்தில் 8 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் இருக்கும் பென்ச் புலிகள் சரணாலயத்தில் உள்ள 2 பெண் புலிகள் 2 மாத இடைவெளியில் 8 குட்டிகளை ஈன்றுள்ளன.

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை வெகுவாக்க குறைந்து வருகிறது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படு்த்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் பென்ச் புலிகள் சரணாலயத்தில் உள்ள 2 பெண் புலிகள் 8 குட்டிகள் ஈன்றுள்ளன.

இது குறித்து பென்ச் துணைத் தலைவர் ஓ.பி. திவாரி இன்று பிடிஐக்குத் தெரிவித்ததாவது,

கடந்த மாதம் ஒரு பெண் புலி தனது 5 குட்டிகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதம் இன்னொரு பெண் புலி தனது 3 குட்டிகளுடன் இருப்பதை எங்கள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த 2 பெண் புலிகளும் பென்ச் சரணாலயத்திற்குட்பட்ட கர்மஜ்ஹிரி தொடர் அருகில் தான் குட்டிகளை ஈன்றுள்ளன. கிழக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த சரணாலயம் சுமார் 411 சதுர கி மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

5 குட்டிகளை ஈன்ற பெண் புலி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டது. பெண் புலிகள் தான் குட்டிகளை ஈன்றவுடன் இடம்பெயர்வது வழக்கம். அந்த பெண் புலிக்கு 6 வயது இருக்கும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+