முதல்வர் கருணாநிதிக்கு நல்லிணக்க நாயகர் விருது

அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் மதுரையில் நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் தமிழ் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் முதன்முதலாக 5 நாட்கள் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுதான். இந்த மாநாடு எந்தவிதமான அரசியல் சார்பும் இல்லாமல் நடந்தது.
அதை சிறப்பாக நடத்திக் காட்டிய முதல்வர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுகள். எங்கள் கட்சி சார்பில் 60 ஆண்டுகளாக மத நல்லிணக்க விருதுகள் வழங்கி வருகிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4-ந் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று 3 பேருக்கு வழங்கி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்த 3 பேருக்கும் வழங்கும் விருதை, நமது முதல்வர் கருணாநிதிக்கே வழங்க உள்ளோம்.
அதாவது முதல்வருக்கு நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற விருது வழங்கி பாராட்ட உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications