அபுதாபியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஏ.டி.எஃப்.சி. அணி வெற்றி

அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் நடத்திய 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் நேஷனல் டவர் ஸ்டேடியத்தில் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
இப்போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்றன. ஏ பிரிவில் அபுதாபி ஸ்டார், பிரேவ்ஸ் பட்டாலியன், ஈடிஏ மெல்கோ ஆகிய 3 அணிகளும், பி பிரிவில் பைட்டர்ஸ் 11, ஏ.டி.எஃப்.சி., எம்.எம்.சி.சி. ஆகிய் 3 அணிகளும் பங்கேற்றன.
கடந்த இரு மாதங்களாக நடைபெற்ற போட்டிகளில் ஏ பிரிவில் பிரேவ்ஸ் பட்டாலியனும், பி பிரிவில் ஏ.டி.எஃப்.சி. ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பிரேவ்ஸ் பட்டாலியன் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அசிம் 62 (34 ), கேப்டன் செய்யது அலி 18 (15 ) ரன்கள் குவித்தனர். ஏ.டி.எஃப்.சி.யின் காசி 4 ஓவர்களுக்கு 25 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். காலித் 3 ஓவர்களுக்கு 9 ரன்கள் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
பிறகு 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய ஏ.டி.எஃப்.சி. அணி 14 .5 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
அந்த அணியில் பாலா 45 (19 ), கங்கா 22 (20 ) ரன்கள் எடுத்தனர். மேலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரேவ்ஸ் பட்டாலியன் பேட்ஸ்மேன் ரில்வான் சிறந்த பேட்ஸ்மேன் விருதினை தட்டிச் சென்றார். அவர் மொத்தம் 148 ரன்கள் எடுத்தார் அவருக்கு எம்.எம்.சி.சி. அணியின் சார்பாக எம்.எம்.சி.சி. அணியின் வேக பந்து வீச்சாளர் அபு தாகிர் கோப்பையை வழங்கினார் மற்றும் ஈடிஏ மெல்கோ அணியின் கேப்டன் பரிசு வழங்கினார்.
ஏ.டி.எஃப்.சி. காலித் 14 விக்கட்டுகள் எடுத்தார், அவருக்கு எம்.எம்.சி.சி. அணியின் முன்னாள் துணை கேப்டன் ஞானியர் பரிசு கோப்பையை வழங்கினார் மற்றும் எம்.எம்.சி.சி. அணியின் ஆல் ரவுண்டர் முஹம்மத் இப்ராகிம் சைட் பரிசு தொகையை வழங்கினார். ரன்னர் கோப்பையை ஜி. முஹம்மது அசன் ஸ்பான்சர் செய்தார். அவருக்கு பதிலாக எம்.எம்.சி.சி. அணியின் கேப்டன் சயீத் ரன்னர் கோப்பை மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார்.
வெற்றிக் கோப்பையை ஸ்பான்சர் செய்த ஈடிஏ மெல்கோ மேலாளர் முஹம்மது உமர் அன்சாரி ஏ.டி.எஃப்.சி. அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையையும் வழங்கினார். மேலும் இந்த போட்டிகளை சிறப்பாக நடத்தித் தந்த எம்.எம்.சி.சி. அணியின் நிர்வாகிகள் பிஎஸ் காஜா மொஹிதீன், தப்ரே ஆலம் மற்றும் அந்த அணிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications