அமெரிக்காவில் மாரி செல்வராஜ்.. தமிழர்களுடன் கலந்துரையாடல்
பிரிஸ்கோ, டெக்ஸாஸ்: பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் அமெரிக்காவில் தமிழர்களிடையே நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினார்.
சமூக வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள சாதி குறித்தும், மனிதநேயத்தை மீட்டெடுப்பதற்கான தேவை குறித்தும் சக மனிதர்களிடம் தொடர்ச்சியாக உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள்.

தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் மூலம் இலக்கிய உலகத்தில் அறிமுகமாகி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களுடைய குரலிலேயே பதிவுசெய்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தற்பொழுது அமெரிக்கத் தமிழர்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இங்குள்ள தமிழர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிவருகிறார். இதன் ஒரு கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு டெக்ஸாஸ் மாநிலம் பிரிஸ்கோ நகரில் உள்ள சென்னை கஃபே உணவகத்தில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் ஒரு இரவு விருந்தும் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்தும், படத்தில் இடம்பெற்ற பல்வேறு குறியீடுகள் குறித்தும் மற்றும் பொதுவான திரைப்படம், எழுத்து, சமூகம், அரசியல் குறித்தும் தோழர்களின் பல கேள்விகளுக்குப் பொறுமையாகவும், யதார்த்தமாகவும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கலந்துரையாடினார்.
திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து சக மனிதர்களிடம் உரையாடிக்கொண்டே இருப்பேன் என்றும் மனித மாண்பை மீட்டெடுப்பதற்காக கலையைப் பயன்படுத்துவேன் என்றும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

சமத்துவத்தைப் பேசிய பரியனுக்கும், "மரித்த பின் உடலெங்கும் நீலம் பரவும் நான் யார்?" என்ற கேள்வியை முன்வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்குப் படிப்பு வட்ட தோழர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தகவல்: ஃப்ரிஸ்கோ ஸ்டுடியோஸ்.
-
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications