குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள்... ஆங்கில மொழி நடையில் வெளியாகிறது!
குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள் புத்தகம் ஆங்கில மொழி நடையில் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை : குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள் புத்தகத்தை கமலேஷ் சுப்ரமணியம் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது.
குழந்தைகள் வளர்ப்பில் மிகவும் சவாலான விஷயம் அவர்களுக்கு நற்பண்புகளை புகுத்தி வளர்ப்பது. இவை சாத்தியமாகிறது கதை சொல்லிகள் மூலம், புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள், திருக்குறள் என அனைத்தையும் கதை சொல்லிகளாக குழந்தைகள் மனதில் எளிதில் புரிய வைக்க முடியும். தமிழ் மொழியில் இது போன்ற கதை சொல்லிகள் எண்ணிலடங்காமல் கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலத்தை பொருத்தமட்டில் அயல்நாட்டு கதைகளே புத்தகங்களாக கிடைக்கின்றன அவற்றையே குழந்தைகளும் வாங்கிப் படித்து வருகின்றனர்.

Recommended Video
இதில் புதிய முயற்சியாக திருக்குறளை கதைகள் வடிவில் ஆங்கில மொழி நடையில் முயற்சித்துள்ளார் கமலேஷ் சுப்ரமணியன். திருக்குறளைப் போன்ற ஒரு உயர் பண்பை வளர்க்கும் நூல் உலகில் எங்குமே இல்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளை கதை வடிவில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை செய்துள்ளார் இவர்.
எமரால்ட் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ள இந்த நூலானது தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் தீபா ஹரிஹரன், உலகத் தமிழ் சங்க இயக்குநர் சேகர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன், மூத்த பத்திரிக்கையாளர் திருவேங்கிமலை சரவணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications