ஏன் இந்த அச்சம் தெரியுமா?
-கவிஞர் மகுடேசுவரன்
எமக்கு
ஓர் இந்திக்காரனைக் கண்டால்
அச்சமில்லை.
அவன்
வாழத்துடிக்கும் ஒருவன்.
தன் வாழ்க்கைத் தேவைகளைப் பெறுவதற்கு
உழைப்பைத் தர வந்துள்ளான்.
வியர்வைக்குத் தங்கக்காசு
கொடுக்கும் நிலமாயிற்றே...
பிழைத்துக்கொள்ளட்டும்.

எமக்கு
வடபுலத்தார் கூட்டத்தைக் கண்டு
அச்சமில்லை.
அவர்கள்
இடம்பெயர்ந்து வந்தவர்கள்.
கூட்டு உழைப்பாளிகள்.
நினைவெல்லாம்
பிறப்பூரில் நிறுத்தியவர்கள்.
இங்கேயே தங்கிவிடும்
எண்ணமில்லாதவர்கள்.
என்றேனும் ஒருநாள்
கிளம்பிச் செல்வார்கள்.
எமக்கு
வட இந்தியன் செய்யும் தொழிலால்
அச்சமில்லை.
கைத்திறமும் பாடுகளும்
அவனுடையவை என்றால்
பயன்கள் எமக்கு.
தொழில் செய்யும் மனத்தில்
வேறெந்தத் தீங்கும் தோன்றாது.
எமக்கு
இந்திக் குடும்பங்களைக் கண்டு
அச்சமில்லை.
அவர்கள்
பிழைப்பைத் தேடி வந்தவர்கள்.
பிள்ளைகளைக் காக்கும்
நோக்குள்ளவர்கள்.
குடும்பத்தோடு இடம்பெயர்ந்தவனும்
இடிமழைக்கு
அஞ்சி நடுங்கும் குருவியும் ஒன்று.
தாமுண்டு
தம் வேலையுண்டு என்றிருப்பார்கள்.
எமக்கு
வடநாட்டு வண்டிகளைக் கண்டு
அச்சமில்லை.
சாலையை விட்டு விலகாமல்
தடம்பிடித்தபடி செல்பவை அவை.
வழியோரத்தில் நிறுத்தி
அடுப்பு மூட்டி
ஆக்கித் தின்றுவிட்டு
நிழலில் தூங்கியெழுந்து
முகங்கழுவிச் செல்கின்றார்கள்.

எமக்கு
அவர்கள் பேசிக்கொள்ளும்
இந்திமொழி குறித்தும் அச்சமில்லை.
அவை காற்றில் உதிர்ந்து
கரையும் சொற்கள்.
அவர்களுக்குள்
கலந்துரையாடுகிறார்கள்.
கேளாச் செவியுடைய எமக்கு
அச்சொற்கள் தேவையுமில்லை.
ஆனால், எமக்கு
இங்கே எழுதப்படும் இந்தி எழுத்துகள்
அச்சமூட்டுகின்றன.
அவை நாத்தொங்க அமர்ந்திருக்கும்
ஓநாய்க்கூட்டம்போல் தென்படுகின்றன.
அவ்வெழுத்துக் கொக்கிகள்
எம் எழுத்துகளை நெருக்குகின்றன.
அவற்றைச் சிறிதாக்கியுள்ளன.
எமக்குத் தெரியாத ஒன்றை
எமக்குத் தெரியாத ஒருவர்க்குத்
தெரிவிக்கின்றன.
எம்மை வைத்துக்கொண்டு
மறைவாய்ப் பேசுகின்றன.
முதுகைத் தடவித்தரும் ஆட்சியாளனின்
அன்பைப் பெற்றுள்ளன.
என்ன செய்துவிடமுடியும் உன்னால்
என்று எள்ளுகின்றன.
அதனால்தான் அஞ்சுகிறோம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications