Rasi Palan This Week: மகர ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. கோபம் தான் பிரச்சனையே
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 2 ஆம் இடத்தில் ராகுவும், 8 ஆம் இடத்தில் கேதுவும் இருப்பதால் கோளார் பதிகத்தை கேட்பது சர்ப்ப தோஷ தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். பண வரவு நன்றாக இருக்கும்.
கவனம்
துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்திலும் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. ராகவேந்திரர் வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். பயணங்களில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
பிரச்சனைகள் தீரும்
பணம், உத்தியோகம் ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய அற்புதமான காலகட்டம். இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த, இழுபறியாக இருந்த அனைத்து விஷயங்களும் இனி அடுத்தடுத்து நடக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும்.
முதலீடுகள்
வியாபாரத்தை புதுப்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக முதலீட்டுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடுகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தோஷங்கள் அனைத்தில் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படும். குடும்பத்தில் பேரானந்தம் காணப்படும். முதுகு தண்டுவடத்திற்கு உடற்பயிற்சி செய்வது நல்லது.
வழிபாடு
எல்லா விதத்திலும் அனுகூலம் ஏற்படும். தேவையில்லாத கோபம், சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருப்பது நல்லது. வெளியிடத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பது மேன்மையை ஏற்படுத்தும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications