கும்ப ராசியை தூக்கிவிடும் குரு பகவான்.. கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் லாபம்
வார ராசி பலன்: புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளுடன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. தடைபட்ட காரியங்கள் இந்த வாரத்திலாவது நடைபெறுமா என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
நம் ராசி பலன்களுக்கு சனி, குரு, ராகு கேது மாறியான கிரகங்களின் அமைப்பு மட்டுமே முக்கியமல்ல. வருடாந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களை போலவே மாதந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களின் அமைப்பு முக்கியம். ஒவ்வொரு வாரமும் கிரக நிலைகளில் மாற்ற இருக்கும். ஆனி மாதத்தின் கடைசி மாதமாகும்.

அடுத்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 7.7.2025 முதல் 13.7.2025 வரையிலான காலகட்டத்தில் 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்தக் கட்டுரையில் கும்பம் ராசிக்கான பலன்களை காணலாம்.
கும்பம்
கும்பம் ராசியினர் குடும்பங்களில் அடுத்தடுத்து நல்லது நடக்கும் அற்புதமான வாரம். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்யோகம், தொழில் சார்ந்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். கடவுள் அருளால் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் தைரியமாக இறங்க கூடிய காலம் இது.
குரு பார்வை
குரு பகவான் பார்வை இருப்பதால் உங்களின் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும். அடுத்த வருடம் வரை உங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அதிக ஆதாயம் உண்டு. தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். இழுபறியில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆச்சர்யப்படுமளவுக்கு முன்னேற்றம் காணப்படும்.
குழந்தைகள்
குழந்தைகள் விஷயத்தில் இருந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தாய், தந்தை வழி உறவு மேம்படும். விவசாய பண்ணை வீடு, கடற்கரை அருகே சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
கவனம்
எதிரிகள் விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை வேண்டும். இடைத்தரகர்கள், மத்தியஸ்தர்களை நம்பி எந்த பிரச்சனையிலும் சிக்கி விட வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உடலுக்கு ஓய்வு அவசியம். தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்
ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வயிறு, ஜீரணம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாழக்கிழமை நாளில் ராகவேந்திரர் மற்றும் சாய் பாபாவை வழிபடுவதால் தசள் நிவர்த்தியாகி நல்ல பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications