நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி
நெல்லையப்பர் கோயில் பாதுகாப்பு கருதி, கடந்த 2004ம் ஆண்டு மூடப்பட்ட வாசல் கதவுகள் 17 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டன.
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு மூடப்பட்ட வாசல் கதவுகள் 17 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு பூஜையுடன் இன்று திறக்கப்பட்டன. நீண்ட காலத்துக்குப் பின்னர் திறக்கப்பட்ட வாசல்கள் வழியாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று நெல்லையப்பரையும் காந்திமதி தாயாரையும் கண் குளிர தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில், நெல்லையின் அடையாளமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் தாமிரசபையாக போற்றப்படுகிறது. இறைவன் நெல்லையப்பராகவும். வேணுவனநாதராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வேதசர்மா என்பவர் சிவன் மீது பக்தி கொண்டவர். ஊர் ஊராக சென்று சேகரித்த நெல்மணிகளை தனது வீட்டிற்கு பக்கத்தில் காயவைத்திருந்தார். அப்போது பெரு வெள்ளத்துடன் மழை பெய்தது. மழை வெள்ளம் நெல்லை அடித்துச் சென்று விட்டால் இறைவனுக்கு எப்படி நைவேத்தியம் படைப்பது என்று கவலைப்பட்டார் வேதசர்மா. அப்போது இறைவன் சிவபெருமான் நெல்லுக்கு வேலி அமைத்தார். நெல்லுக்கு இறைவன் வேலி அமைத்து காத்த காரணத்தால் நெல்வேலி நாதானாக நெல்லையப்பராக போற்றப்படுகிறார். திருநெல்வேலி என்ற பெயரும் ஊருக்கு வந்தது.
நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா காலத்தின் ஆனித் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

நான்கு வாசல்கள்
சிவ ஆலயங்களில் உள்ளது போலவே பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலிலும் நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. அதன் வழியாகப் பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 2004ஆம் ஆண்டு வடக்கு வாசல் அருகே நடந்த கொலைச் சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி கிழக்கு வாசல் தவிர பிற வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கோயிலின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு வாசல்கள் மூடப்பட்டு கடந்த 17 வருடங்களாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கவலையடைந்தனர்.

அமைச்சர் ஆய்வு
கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழா சமயத்தில் மட்டும் மேற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல்களின் கதவுகள் திறக்கப்பட்டாலும் திருவிழா முடிந்த மறுநொடியே கதவுகள் மீண்டும் மூடப்பட்டு விடும்.
நெல்லையப்பர் கோயிலில் கடந்த வாரம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பாக, கோயிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாசல்கள் திறப்பு
கோபுர வாசல் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, கோயிலின் அனைத்து கோபுர வாசல்களையும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உத்தரவைத் தொடர்ந்து கோயிலின் மேற்கு வடக்கு மற்றும் தெற்கு வாசல்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு தீபாராதனை
நெல்லையப்பர் கோயிலின் வாசல்கள் இன்று திறக்கப்பட்டதையொட்டி கோயில் யானையான காந்திமதி வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் வாசல் கதவுகளுக்குச் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டன.

பக்தர்கள் மகிழ்ச்சி
17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலின் நான்கு வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயிலில் நான்கு வாசல்களும் திறக்கப்படும் நிகழ்வில் செயல் அலுவலர் ராமராஜூ உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். நெல்லையப்பர் கோயில் வந்த அனைத்து பக்தர்களும் கொரனா நடைமுறையைப் பின்பற்றி வழிபட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வாசல்கள் வழியே பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று நெல்லையப்பரையும் காந்திமதி தாயாரையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications