சென்னை சில்க்ஸ் தீ விபத்து - தி நகர் தீ நகர் ஆனது ஏன் தெரியுமா?
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஜோதிட ரீதியாக காரணங்களை ஆராயலாம்.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு ஜோதிட ரீதியான காரணங்களை ஜோதிடர்கள் கூறியுள்ளனர். தீ விபத்திற்கு ஜவுளி மற்றும் துணிகளின் காரகன் சுக்ரன் நீர் ராசியிலிருந்து நெருப்பு ராசிக்கு நகர்ந்து தீ விபத்தினை ஏற்படுத்தும் கேதுவின் சாரத்தில் கேதுவின் பார்வை பெற்று குரு பார்வையை இழந்து நின்றதும் காரணமாகும் .
மேலும் வியாபாரத்தை குறிக்கும் புதனும் நெருப்பை குறிக்கும் செவ்வாயும் பரிவர்தனை பெற்று நின்றதும் வியாபாரம் செய்யும் இடத்தில் தீப்பிடிக்க ஒரு காரணமாகும். தீ விபத்திற்கு ஜோதிட ரீதியான காரணங்களை பார்க்கலாம்.
கேதுவை ஞான காரகன் எனவும் மோட்ச காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தீ விபத்து மற்றும் எரிந்து சாம்பலாவதற்க்கு ஜோதிட காரகர் யார் தெரியுமா? ஞான காரகன் என்றும் மோட்ச காரகன் என்றும் வர்ணிக்கப்படும் கேது பகவான்தான்.
கேதுவின் அதிதேவதை ருத்ரன் ஆகும். அதாவது சிவனின் மிக ஆக்ரோஷமான ஸ்வருபம் ஆகும். எனவேதான் கேதுவும் அழிக்கும் தன்மையை பெற்றிருக்கிறார். கேதுவின் தன்மை நெருப்புத்தன்மை ஆகும். அனைத்தையும் அழித்து பிடி சாம்பலாக்கி படைப்பின் மறுசுழற்சிக்கு உதவுபவர் கேதுவாகும்.

கேதுவின் காரகங்கள்
மேலும் கேதுவின் காரகங்களில் மயானம், கல்லரை, சுடுகாடு, பிணவரை, பிண ஊர்தி, கழிவு அகற்றுதல், முடி, முடி திருத்துதல், பிணம் எரித்தல்/அடக்கம் செய்தல், பிரளயங்கள், குரூர சம்பவங்கள், கொத்து கொத்தான மரணங்கள், தீ விபத்துகள், எரிந்து நாசமாகுதல் போன்றவை அடங்கும்.

கேதுவின் ஆதிக்கம்
ஆக்கத்திற்க்கு உபயோகிக்கும் நெருப்பிற்க்கு சூரியனும் செவ்வாயும் காரகனாகின்றனர். ஆனால் அழிவை தரும் நெருப்பு, தீ விபத்துகள், பிணத்தை எறிக்கும் நெருப்பு, எரிமலை, தூமகேது எனப்படும் எரிகற்கள் (தூமகேது கேதுவின் மகனாவார்) ஆகியவை கேதுவின் ஆதிக்கமும் காரகமும் கொண்டவையாகும்.

தீ விபத்திற்குக் காரணம்
நேற்றைய தீ விபத்திற்கு ஜவுளி மற்றும் துணிகளின் காரகன் சுக்ரன் நீர் ராசியிலிருந்து நெருப்பு ராசிக்கு நகர்ந்து தீ விபத்தினை ஏற்படுத்தும் கேதுவின் சாரத்தில் கேதுவின் பார்வை பெற்று குரு பார்வையை இழந்து நின்றதும் காரணமாகும் . மேலும் வியாபாரத்தை குறிக்கும் புதனும் நெருப்பை குறிக்கும் செவ்வாயும் பரிவர்தனை பெற்று நின்றதும் வியாபாரம் செய்யும் இடத்தில் தீப்பிடிக்க ஒரு காரணமாகும்.

செவ்வாய், சனி பார்வை
செவ்வாய் சனி சேர்க்கை பார்வை போன்றவை கொடூமான விபத்துகளை ஏற்படுத்துகின்றன. நேற்றைய கிரக நிலையில் நெருப்பு ராசியில் வக்ரம் பெற்று கேது சாரம் பெற்று நிற்கும் சனி செவ்வாயை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

பேரழிவிற்கு காரணம்
மேலும் மாந்தியோடு சேர்ந்து நெருப்பு ராசியில் நிற்க்கும் ராகு தனது பதினோராம் பார்வையால் புதன் வீட்டையும் அதில் உள்ள செவ்வாயையும் பார்ப்பது வியாபார ஸ்தல விபத்து மற்றும் பேரழிவை குறிக்கிறது.

கேரளா தீ விபத்து
இதே போன்று அழிக்கும் கடவுளான ருத்ரனை அதிதேவதையாக கொண்ட கேது, கேரளாவில் 10/4/2016 அன்று
கொல்லத்தை சேர்ந்த பரவுர் புத்திங்கள் காளி கோயிலில் (காளியும் கேதுவை குறிக்கும் சிவாம்சமே) ஏற்பட்ட பட்டாசு தீ வீபத்தால் 111பேர் மரணமும் 350 பேர் பலத்த காயமும் அடைந்த சம்பவ நேரத்தில் கேது கும்ப லக்னத்தில் நின்று லக்னாதிபதி சனி வக்ரம் பெற்று செவ்வாயுடன் காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் சேர்ந்து நிற்பதும் மற்றொரு நெருப்பு கிரகமான குரு வக்ரம் பெற்று நெருப்பு ராசியான சிம்மத்தில் ராகுவோடு சேர்ந்து பரிவர்தனை பெற்று நிற்க்கும் கொடுரமான நிலை தீ விபத்திற்கு காரணமானது. மேலும் லக்னத்தில் நிற்கும் கேது மாந்தியின் பார்வை பெற்றது மேலும் விபத்தை தீவிரமாக்கியது. இந்தியாவின் ஜாதகத்தில் ஏழாம்பாவத்தில் நிற்கும் ஜெனன கேதுவின் மீது சனியும் செவ்வாயும் கோசாரத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications