Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிள்ளைகளின் புத்திசாலித்தனமும் திறமையும் அதிகரிக்க..இந்த விசயத்தை செய்யுங்கள்.. வெற்றி தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த ஒரு விசயத்திலும் வெற்றி பெற புத்திசாலித்தனமும் விரைந்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கும் திறமும் அவசியம். தலைமைப் பதவியில் அமர கூர்மையான புத்தி மற்றும் நல்ல நினைவாற்றல் மிகவும் அவசியம். ஜோதிட சாஸ்திரத்தில், புத்திசாலித்தனத்திற்கும் மூளை சுறுசுறுப்படையவும் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாகும். புத பகவானின் கருணை இருந்தால், கூர்மையான அறிவாற்றலை பெறலாம். இதனுடன், பிறரை பேச்சால் கவரும் திறனும் அதிகரிக்கும். அபாரம். ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கவும் புத்தி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க, புத பகவானின் அருள் அவசியம்.

புதனுடன் வாழ்க்கையில் வெற்றியைத் தரும் கிரகமான சூரியனையும் வணங்கினால், வாழ்க்கையில் புத்தி கூர்மையினால், உயர் பதவியைப் பெறலாம். புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறது. எனவே, வாழ்வில் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெற, சூரியனையும் புதனுடன் சேர்த்து வழிபடவும்.

 நினைவாற்றல் அதிகரிக்க

நினைவாற்றல் அதிகரிக்க

பரபரப்பான வாழ்க்கை, வேலைப்பளு, என இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனதும் மூளையும் எளிதில் சோர்வடைகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை ஆகியவை நினைவாற்றலை குறைத்து விடுகிறது. மறதி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை என ஆகிவிட்டது. போட்டி நிறைந்த உலகத்தில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் அப்போதுதான் வெற்றி தேடி வரும். பிள்ளைகளுக்கும் சுறுசுறுப்பு அதிகரிக்கவும் புத்திசாலித்தனம் கூடவும் சில விசயங்களை செய்ய வேண்டும்.

அத்திமரம்

அத்திமரம்

அத்தி மரத்திற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. நாம் எதை நினைத்துக் கொண்டு இந்த இலையால் இறைவனுக்கு அர்ச்சனை செய்கின்றோமோ அது உடனடியாக நடக்கும். படிக்கின்ற குழந்தைகள் அத்திமர இலையைக் கொண்டு பரிகாரத்தை செய்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மங்கி போன புத்தி கூட மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும். காஞ்சிபுரத்தில் அத்திவரதரைக் தரிசனம் செய்ய பல லட்சக்கணக்கான மக்கள் கூடியதும் தங்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத்தான்.

புத்திசாலித்தனம் அதிகரிக்கும்

புத்திசாலித்தனம் அதிகரிக்கும்

உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு அத்தி மர இலையால் மாலை கட்டியும் போடலாம். அப்படி இல்லை என்றால் அத்திமர இலைகளை வைத்து அர்ச்சனையும் செய்யலாம். இப்படி தினந்தோறும் அத்திமர இலைகளைக் கொண்டு வீட்டில் இருக்கக்கூடிய இறைவனுக்கு வழிபாடு செய்து வந்தால், மறைந்திருக்கும் திறமை வெளிப்பட தொடங்கி விடும். மந்தபுத்தி நீங்கி புத்திசாலிததனம் அதிகரிக்கும்.

பச்சை நிற பொருட்கள் தானம்

பச்சை நிற பொருட்கள் தானம்

ஆண் பெண் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால் உங்களுடைய மந்தத்தன்மை நீங்கும். சோம்பேறித்தனம் உடம்பை விட்டு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு புத்தி கூர்மையோடு ஞாபக சக்தியுடன் உங்களுடைய வேலையை செய்வீர்கள். பச்சை பொருட்களை தானம் செய்வதும் அறிவுத்திறனை அதிகரிக்கும். பச்சை நிற ஆடைகள், பச்சை பயறு, கீரை போன்ற புதனுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்யலாம். பசுவிற்கு பயறு, கீரை போன்றவற்றை உணவாக அளிக்கலாம்.

விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமான் கேதுவின் அம்சம். அவர் ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயகருக்கு அருகம்புல் கொண்டு தொடர்ந்து வணங்கி வர புத்தி கூர்மையாகி, நினைவாற்றல் அதிகரிக்கத் தொடங்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது, துர்க்கை போற்றி மந்திரத்தை உச்சரிப்பதால், நம் புத்தி கூர்மையாகும். மனதில் பயம் நீங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்கள் மனம் அமைதி அடைய தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் போற்றி மந்திரத்தை உச்சரிக்கவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+