மன அமைதி தரும் கூடலூர் ' திரிசூல வடிவ' காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்... பக்தர்கள் பால்குடம்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், காரியத்தடை நீங்க, மனக்குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, வீடு கட்ட, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பிறக்க என பல்வேறு பிரார்த்தனைக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
தேனி: கூடலூர் வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பலரும் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், காரியத்தடை நீங்க, மனக்குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, வீடு கட்ட, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பிறக்க என பல்வேறு பிரார்த்தனைக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
ஏப்ரல் 26ம் தேதி விழா, காப்பு கட்டி முளைப்பாரி பயிரிடுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை வேளையில் பெண்கள் முளைப்பாரி கும்மி கொட்டி ஆராதனை செய்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக வைபவம் செவ்வாய்க்கிழமை மாலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

கோவில் கும்பாபிஷேகம்
3 காலங்களாக பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், புனித தீர்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலச தீர்த்தங்களை கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பால், பன்னீர், இளநீர், திரவியம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. பின்னர், அம்பிகை சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திரிசூலவடிவ காளியம்மன்
இக்கோயிலில் உள்ள அம்பிகை, அவளது ஆயுதமான திரிசூலத்தின் வடிவத்தில் காட்சியளிக்கிறாள். எனவே, திரிசூலத்திற்கே அம்மன் போல அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆயுதமே இங்கு தெய்வமாக வழிபடுவதால் இங்கு வேண்டிக்கொள்ள தோஷங்கள் பாவங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

காரிய வெற்றி கிடைக்கும்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், காரியத்தடை நீங்க, மனக்குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க, வீடு கட்ட, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பிறக்க என பல்வேறு பிரார்த்தனைக்காக பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

பால்குடம் நேர்த்திக்கடன்
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் காளியம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வ.உ.சி., வெள்ளாள பெருமக்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications