நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி அவையில் புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளது காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட கட்சிகள்.
இதனிடையே மக்களவை கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

நாடாளுமன்றம்
17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடர் நாளை காலை தொடங்கவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள்
வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து அவையில் புயலை கிளப்ப காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனை எதிர்கொள்ள அரசு தரப்பும் தயாராக உள்ளது.

சுமூகமாக
குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இருக்கை மாற்றம்
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா இப்போது சிலுப்பிக்கொண்டு நிற்பதால், மக்களவையில் சிவசேனா எம்.பி.க்களுக்கான இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் நாடாளுமன்ற அலுவல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications