மோடி பேட்டி கொடுப்பாரா? மேயர் பிரியா அப்படி சொன்னாரா? சீறிய காயத்திரி! கடைசியில் பார்த்தால் ட்விஸ்ட்
சென்னை: பிரதமர் மோடியை மேயர் பிரியா விமர்சனம் செய்ததாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.
சென்னையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக மழை பெய்தால் சென்னையில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். கடந்த வருடம் கூட சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம் அப்படி ஏற்படவில்லை.

சென்னை
இரண்டு வாரமாக சென்னையில் மிக கனமழை பெய்தும் கூட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்படவில்லை. 90 சதவிகித பகுதிகளில் வெள்ளம் ஏற்படவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருப்பதால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வேகமாக வடிந்தது. வெள்ளம் ஏற்பட்ட ஒரு சில இடங்களிலும் உடனே மோட்டார் வைத்து நீர் வெளியேற்றப்பட்டது. இந்த பணிகளை சென்னை மேயர் பிரியா நேரில் கவனித்தார்.

வெள்ளம்
எங்கே வெள்ளம் ஏற்படுகிறது என்பதை பிரியா நேரில் பார்வையிட்டு அங்கு அமைச்சர்களின் உதவியுடன் தண்ணீர் வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தார்.மேயர் பிரியா அரசியலுக்கு புதிது என்பதால் அவருக்கு உதவியாக அமைச்சர்கள் உடன் இருக்கிறார்கள். அதே போல் செய்தியாளர் சந்திப்பிலும் சில விஷயங்களை பேசும் போது அவருக்கு பதற்றம் ஏற்படுகிறது. இதனால் பாஜகவை சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் அவரை விமர்சனமும் செய்து வருகின்றனர்.

மேயர் பிரியா
இந்த நிலையில் பதிலுக்கு பிரதமர் மோடியை மேயர் பிரியா விமர்சனம் செய்ததாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது ஏற்படும் சிறு வார்த்தை பிழைகளை கேலி செய்கிறார்கள். மோடி இதுவரை எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என பாஜகவினர் சிந்திக்கவேண்டும், என்று மேயர் பிரியா சொன்னதாக செய்தி பரவி வருகிறது.

மோடி
இதை பாஜகவின் காயத்திரி ரகுராம் பகிர்ந்து விமர்சனமும் செய்து இருந்தார். அதில், திமுகவுக்கு சொந்தமான பத்திரிக்கை ஊடகங்களுக்கு நிறுவன கலைஞர் எம்எல்ஏ எம்பி அமைச்சர்கள் மற்றும் மேயர் நீங்கள் இருக்கும் போது, பிறகு ஏன் மோடி தேவை? நீங்கள் திமுக பத்திரிக்கை ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் மற்றும் சன் டிவி குடும்பம் உங்கள் மூலம் சம்பாதிக்கலாம். ஏன் மற்றவர்கள்? ஒரு குடும்பம் அரசனாக வாழ நீங்கள் உழைக்க முடியும் ஏன் ஒரு குடும்பத்திற்காக மற்றவர்கள் உழைக்க வேண்டும்?, என்று குறிப்பிட்டு இருந்தார்.

காயத்திரி ரகுராம்
ஆனால் காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பகிர்ந்த இந்த செய்தி பொய்யானது ஆகும். திமுகவினர் சிலரும் கூட இதை உண்மை என்று நம்பி பகிர்ந்து உள்ளனர். ஆனால் மேயர் பிரியா இது போல மோடிக்கு எதிராக எங்கும் பேசவில்லை. அவர் இது மாதிரியான ஸ்டேட்மென்ட் எதுவும் விடவில்லை. சமூக வலைத்தளங்களில் சுற்றும் இந்த போட்டோ கார்ட் பொய்யானது ஆகும். இதை நம்பி இணையத்தில் சில நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
பிரதமர் மோடியை மேயர் பிரியா விமர்சனம் செய்ததாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.
முடிவு
காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பகிர்ந்த இந்த செய்தி பொய்யானது ஆகும்
ரேட்டிங்
-
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications