8ம் வகுப்பு முடித்திருந்தாலே அரசு வேலை! அதுவும் சென்னை, மதுரையில்! அழைப்பு உங்களுக்கு தான்!
சென்னை: சென்னையில் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் சென்னை உயர்நீதிமன்றம், மதுரையில் உள்ள உயர்நீதிமன்றம் கிளைகளில் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் வயது 01.07.2021 தேதி அடிப்படையில் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 32 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களின் இக்கல்வி தகுதி தேவையில்லை. நான்கு சக்கர வாகனத்துக்கான உரிமம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் அரசு சார் அமைப்பு வழங்கிய அடையாள சான்றிதழ்(கல்வி, சாதி சான்றிதழ்) நகல்களுடன் அரசிதழில் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரூ.50 அஞ்சல் தலையுடன் சுயமுகவரியிட்ட உறையுடன் ‛‛அரசு தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை 600 104''என்ற முகவரிக்கு தபால் மூலம் 17.06.2022ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1dP65_ZtnBonWLu57UKVbt1hVvE8s1iKj/view கிளிக் செய்து அறிந்து விண்ணப்பிக்கலாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications