அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டும் போதும்.. நவம்பர் 24-25ல் சென்னையில் இண்டர்வியூ.. நாவலூரில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னைய நாவலூரில் நடைபெறும் இண்டர்வியூவில்பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் எச்சிஎல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Process பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். பிஏ, பிஎஸ்சி, பிகாம் உள்பட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் கல்லூரி படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் இன்ஜினியரிங், எம்சிஏ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.புதிய டெக்லானலஜியை கற்கும் திறன் இருக்கவேண்டும்.நன்கு கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். டீம் பிளேயராகவும்,தனி ஆளாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். லீடர்ஷிப் ஸ்கில்ஸ், பிபிள் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
பணி US ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இந்த பணியை வீட்டில் இருந்து செய்யவோ அல்லது ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் வாய்ப்பு கிடையாது. அலுவலகம் சென்று தான் பணியாற்ற வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான இண்டர்வியூ நவம்பர் 24, 25 என 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Navallur, Sandhiya Infocity, ETA 3 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவில் பங்கேற்போர் 2 ரெஸ்யூம், ஆதார், பார்ன் கார்டு, லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications