Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டும் போதும்.. நவம்பர் 24-25ல் சென்னையில் இண்டர்வியூ.. நாவலூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல்-லில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னைய நாவலூரில் நடைபெறும் இண்டர்வியூவில்பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளது.

hcl-walk-in-drive-for-international-freshers-voice-process-role-and-interview-on-november-24-and-no

அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் எச்சிஎல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Process பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். பிஏ, பிஎஸ்சி, பிகாம் உள்பட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் கல்லூரி படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் இன்ஜினியரிங், எம்சிஏ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.புதிய டெக்லானலஜியை கற்கும் திறன் இருக்கவேண்டும்.நன்கு கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். டீம் பிளேயராகவும்,தனி ஆளாகவும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். லீடர்ஷிப் ஸ்கில்ஸ், பிபிள் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

பணி US ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இந்த பணியை வீட்டில் இருந்து செய்யவோ அல்லது ஹைபிரிட் மாடலில் பணிபுரியும் வாய்ப்பு கிடையாது. அலுவலகம் சென்று தான் பணியாற்ற வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான இண்டர்வியூ நவம்பர் 24, 25 என 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Navallur, Sandhiya Infocity, ETA 3 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவில் பங்கேற்போர் 2 ரெஸ்யூம், ஆதார், பார்ன் கார்டு, லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+