டெங்குவை ஒழிக்க சாணி.. செல்லூர் ராஜு ஐடியாவுக்கு நெட்டிசன்கள் பதில் இதுதான்!
வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை: வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் ஒன்றும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என கூறியுள்ளார். இதனை வைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
|
சரியா தான் இருக்கும்
நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்... என்கிறார் இந்த நெட்டிசன்
|
டெட்டனஸ் வரனுமா?
ஏன் டெட்டனஸ் வருவதற்கா?? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
நடிக்கிறாரா?
உண்மையிலேயே இவரு வெகுளியா? இல்லை நடிக்கிறாரா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
அணைக்கட்டையே மூனவர்தானே?
ஆமாமா நீங்க அணையை தர்மாகோல் வச்சு மூடினவர்தானே ? என்று சொல்கிறது இந்த டிவிட்
|
உருப்படியா சொல்லியிருக்காரு
இந்த ஒன்னத்தான்யா இவரு உருப்படியா சொல்லியிருக்காரு.. என்கிறார் இந்த நெட்டிசன்.
— yajiv(teddy) (@rahmanyajiv24) October 12, 2017 |
அமைச்சருடன் ஒப்பீடு
பல நாடுகளின் விஞ்ஞானிகளை அமைச்சர் செல்லூர் ராஜுடன் ஒப்பிட்டுள்ளது இந்த மீம்