5 நாள் பரோல்ல 30 நிமிடம் தான் கணவர் நடராஜனுடன் இருந்தாரா சசிகலா?
சசிகலாவை கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
சென்னை: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவை கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன.
சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாள் பரோலில் வந்துள்ளார்.
தி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் தினமும் கணவரை சென்று பார்த்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கணவருடன் இருக்க சிறை நிர்வாகம் அனுமதித்திருக்க அவர் 30 நிமிடம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என திரும்பி விடுகிறார். இதனை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
|
30 நிமிடம் தான் இருந்தாரா?
நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்; சசிகலா 30 நிமிடம் உடன் இருந்து கவனித்தார். 5 நாள்பரோல்ல 30 நிமிடம் தான் உடன் இருந்தாரா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
அதையும் சொல்ல வேண்டியது தானே
நடராஜன் உடல்நிலையில் முன்னேற்றம்;சசிகலா 30 நிமிடம் உடன் இருந்து கவனித்தார் வழக்கமா போடுற இட்லி சாப்பிட்டார் அதையும் சேர்த்து போடவேண்டியது? என்கிறது இந்த டிவிட்
|
அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படாது
அரசியல் மாற்றங்கள் கூவத்தூரிலேயே முடிந்துவிட்டது", அம்மையார் சசிகலா வந்திருப்பதால் அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படாது... என்கிறது இந்த டிவிட்
|
மவுன விரதம் போல
நடராசனை காப்பாத்த எடுத்த முயற்சிகூட ஜெ.வுக்கு சசிகலா எடுக்கவில்லை.-ஜெயகுமார்#அந்த 75 நாள் மௌன விரதம் போல... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
கடுமையான நிபந்தனை தவறுதான்
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை கடுமையானது-எம்.எல்.ஏ கருணாஸ் ###ஆமாம்-சசிகலா என்ற விடுதலை போராட்ட தியாகிக்கு கடுமையான நிபந்தனை தவறு தான்... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
கருணாஸை கலாய்த்து டிவிட்
சசிகலா பரோலுக்கு விதிக்கப்பட்ட விதிகள் ஆச்சரியம் அளிக்கிறது: கருணாஸ் எம்எல்ஏ நீங்களெல்லாம் எம்எல்ஏ ஆனது பேரச்சரியம்... என்கிறார் இந்த நெட்டிசன்












Click it and Unblock the Notifications