தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக அமைச்சரவை கூடி இலங்கைப் பிரச்சனை குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது.
இலங்கையில் யாழப்பாணம் பகுதியில் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள் ராணுவத்தினரை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க இந்தியாவிடம் இலங்கை அதிபர் சந்திரிகா கோரிக்கை விடுத்தும்இந்தியா அதை நிராகரித்து விட்டது.
இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் இந்நிலையில் தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடியது.இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் இலங்கைப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் நுழைந்துவிட வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கிறது என்பதுகுறித்து முதல்வர் தெரிந்து கொண்டார்.
மேலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அகதிகள் யாரும் எளிதில் தமிழகத்திற்குள் நுழைந்து விடமுடியாது. தலைக்காவிரியில் ஏராளமாகக் குவிந்துள்ள அகதிகள் விசைப்படகு மூலம் கடந்த வாரம் தமிழகத்திற்குவந்தார்கள். அவர்களில் 23 பேரை தமிழகப் போலீசார் மீட்டனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர் பகுதிகளிலும் கடற்கரையோர மாவட்டங்களிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளதைக் குறித்தும் முதல்வர் தெரிந்து கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் மே 4 ம் தேதி நடப்பதாக இருந்தது. முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாயைச்சந்திக்க டெல்லி சென்றுவிட்டதால் இந்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications