தமிழகத்தில் இன்று
சென்னை
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து நாடு முழுவதும் வியாழக்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு 40 தொழிற்சங்கங்கள்அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில் அதிமுக, தமாகா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அனைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவுதெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் வியாழக்கிழமை வழக்கம் போல் பஸ், ரயில்கள் ஓடும் என்றும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்முழுமையாக செய்யப்பட்டுள்ளன என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் காளித்து, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி ஆகியோர்சென்னையில் புதன் கிழமை கூட்டாக தெரிவித்தனர்.
நாடு முழுவதும் நாளை வியாழக் கிழமை (11ம் தேதி) பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள அகில இந்திய அளவிலான தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இதன்படி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்நிடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆளும் கட்சியை சேர்ந்ததொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை போன்ற தொழிற்சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தை புறக்கணிப்பதாகஅறிவித்துள்ளன. அதேபோல் வணிகர்களின் பொது அமைப்பான தமிழ்நாடு வணிர்கள் சங்கப் பேரவை, வேலை நிறுத்தத்தில்கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
இதற்கிடையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதால், மத்திய மாநில அரசுகளுக்குஎதிரான கட்சிகளான அதிமுக, தமாகா, காங்கிரஸ் போன்ற அரசியல் இயக்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.அக்கட்சிகளை சோர்ந்த தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
ஆனால், ஆளும் கட்சியான திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும், அவற்றின் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தைபுறக்கணிப்பதால், வேலை நிறுத்தம் முழு வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்தியில், மாநிலத்தில் ஆளும்அரசுகளை எதிர்த்து நடைபெறுவதால், ஆளும் அரசுகள் அனைத்து அலுவலகங்களையும், அரசு போக்குவரத்துஸ்தாபனங்களையும் வியாழக்கிழமை வழக்கம் போல் செயல்பட செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
அதன் காரணமாக தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.பஸ், ரயில் போக்குவரத்துக்கு முழு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அன்று சென்னை போலீஸ் கமிஷனர் காளித்து, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதிஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டி:
போக்குவரத்துகள் வழக்கம் போல் இயங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 15 ஆயிரம்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். பஸ்களையோ,ரயில்களையோ தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசு அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர்களைதடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் பஸ், ரயில்களை ஓட்டவும், அரசு அலுவலகங்கள் இயங்கவும் விரிவான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications