மாவீரன்யா வீரப்பன்! புகழ்கிறார் சோ.பா
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாவீரன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பனின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பல ஆண்டுகளாக நன்றாக அறிவார்கள். இப்போது சந்தனக் கடத்தல்வீரப்பனின் பெயரால் வருகிற கோரிக்கைகளெல்லாம் அவரின் பின்னால் இருந்து இயக்குகிறவர்களின்கோரிக்கைகள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
நடிகர் ராஜ்குமார் கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற பெரிய நடிகர். அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது நிச்சயம்.
கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வீரப்பனின் கோரிக்கையை ஏற்றுஉடனடியாக ராஜ்குமாரை விடுவிக்கும் ஏற்பாடுகளில் இரு மாநில அரசுகளும் தீவிரம் காட்டியிருப்பதுவரவேற்கத்தக்கது.
வீரப்பனின் பின்னால் இருப்பது யார் என்று இப்போது பேசி குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பனின் நடவடிக்கைகளுக்கும், அவர் இப்போது விடுத்துள்ள கோரிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க அரசு முழு கவனம் செலுத்தி, எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் முழுதிருப்தி அளிக்கிறது.
வீரப்பன் ஒரு மாவீரன் என்பதை பலமுறை நிருபித்திருக்கிறான். அதனால் இனிமேலும் வீரப்பன் இதுபோன்றநடவடிக்கைகளில் ஈடுபடாமல் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு உட்பட்டு சட்டப்படியானநடவடிக்கைகளுக்கு உள்ளாவதுதான் நல்லது.
பொதுமன்னிப்பு வழங்குவது என்பது இயலாத காரியம். பூலான்தேவிக்குக்கூட தண்டனை கொடுத்த பின்தான்அரசு பொதுமன்னிப்பு கொடுத்தது. அதுபோல சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அரசுபொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றார் சோ.பாலகிருஷ்ணன்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications