For Daily Alerts
Just In
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
போபால்:
இந்தியாவுக்கு வரும்வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இத ஆண்டுஅதிகரித்திருக்கிறது என மத்திய சுற்றுலாத் துறை செயலாளர் பேஸ் பரூவாகூறியுள்ளார்.
1999-2000ம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 சதவிகிதமாக இருந்தது. இந்தஆண்டு இதுவரை 6.6 சதவிகித பயணிகள் வந்துள்ளனர்.
1998 - 1999ம் ஆண்டில் சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரை மந்தமானவருடமாகும். பொக்ரான் அணு குண்டுச் சோதனை மற்றும் கார்கில் போர் காரணமாகசுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் குறைந்தது.
1950- ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு17,000 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது அது வருடத்திற்கு 2.5மில்லியன் பேர் என்ற அளவில் இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை 1990-ம் ஆண்டுக்குப் பின்னரே அதிகரித்துள்ளது என பேஸ்பருவாதெரிவித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Monday, September 4, 2000, 5:30 [IST]