தேசிய அளவில் 3 வது அணி தேவை...கவுடா
தர்மபுரி :
உறுதியான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மூன்றாவது அணி இந்திய அளவில் உருவாக்கப்படும்என தர்மபுரியில் ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கூறினார்.
தர்மபுரியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் தேயிலை விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விவசாயிகள் பாதிக்காத வண்ணம் போராட்டம் நடத்தி சலுகை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
தமிழக தேயிலை விவசாயிகள் பிரச்னையில் அரசு உறுதியான நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. தமிழகமுதல்வர் மத்திய அரசில் இடம் பெற்றிருந்தும் இந்த விவசாயிகளுக்கு எவ்வித முழுமையான பயனையும் பெற்றுத்தர இயலவில்லை.
எனவே, வாஜ்பாய் அரசுக்கு நெருக்கடி கொடுத்தாவது விவசாயிகளுக்கு நிர்ணயவிலை பெற்றுத் தர வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும். இதன் முதல் கட்டமாக சென்னையில்வரும் 28ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம்.
அகில இந்திய அளவில் உறுதியான கொள்கைகளை உடைய கட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு மூன்றாவதுகூட்டணியை உருவாக்குவோம்.
இந்த அணியில் முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வி.பி.சிங், குஜ்ரால் மற்றும் முன்னணித் தலைவர்கள் இடம்பெருகின்றனர். இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
மூன்று மாதங்களாக எங்களது நால்வர் அணி மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கி அதன் தவறானகொள்கைகளைப் பொதுமக்களுக்கு விளக்கி வருகிறது.
ஒவ்வொரு மாநிலம் வாரியாக நாங்கள் சுற்றுப் பயணம் செய்து வருகிறோம். தமிழகத்தின் தலைநகரானசென்னையில் வரும் 28 ம் தேதி மத்திய அரசின் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
தேசிய ஒருமைப்பாட்டில் வாஜ்பாய் அரசு இரட்டை வேடம் போடுகிறது. பொக்ரான் குண்டு வெடிப்பாலும், கார்கில்போராலும் இந்தியாவிற்கு இடம் கிடைத்து விடவில்லை.
இந்தியாவில் பெரும் பொருளாதாரச் சீரழிவில் சிக்கித் திணறி வருகிறது. ஒரு ஆரோக்கியமான, அதேசமயம்பலமிக்க நாடாக இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நால்வர் அணியின் குறிக்கோளாகும்.
பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமானால், கடவுளாலும் இந்த நாட்டைக் காப்பாற்ற இயலாது என்றார்.
மாநிலத் தலைவர் வடிவேலு, கேரள முன்னாள் அமைச்சர் நீலலோகிதாசன் ஆகியோர் பேட்டியின் போதுஉடனிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications