For Daily Alerts
Just In
போர் நிறுத்தம் வாபஸ் ஆகாது: ஜார்ஜ் பெர்னான்டஸ்
பெங்களூர்:
காஷ்மீரில் வன்முறை தொடர்ந்தாலும் போர்நிறுத்தம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூர் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.
இதனால் போர்நிறுத்தம் வாபஸ் என்ற நிலை வருமா? போர் நிறுத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா? என்று பேச்சுக்கேஇடமில்லே.
ரம்ஜான் முடியும் வரை காஷ்மீரில் போர் நிறுத்தம் நீடிக்கும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்
Comments
Story first published: Saturday, May 13, 2000, 5:30 [IST]