கோர்ட்டில் இந்தி எழுப்பிய குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கில் வட இந்தியர் அளித்த சாட்சியத்தை தவறாக மொழி பெயர்த்ததாக மொழி பெயர்ப்பாளர் மீது புகார்கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்பட 6 பேர் மீது இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை 3 வது தனிநீதிமன்றத்தில்நடந்து வரும் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது வேட்டி- சேலைகளை விநியோகம் செய்த வடஇந்தியர்கள் கிருஷ்ண நாராயண லால், கவுதம்சன் ஜெயின், பகத்சன் ஜெயின்,மகேந்திர குமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

இவர்கள் அனைவரும் இந்தி மொழியில் சாட்சியம் அளித்தனர். அதை தமிழில் அதிகாரி ஒருவர் மொழி பெயர்த்தார்.

அவர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது வக்கீல் ஒருவர் கூறுகையில், மொழி பெயர்ப்பாளர், சாட்சியாளர் சொல்லாததையெல்லாம் கூறுகிறார்என்றார். அதற்குப் பதிலளித்த நீதிபதி கூறுகையில், அவர் சரியாகத்தான் மொழி பெயர்க்கிறார் என்றார்.

பின்னர் மொழி பெயர்ப்பாளர் கூறியதை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்ததைப் போட்டுக் காட்டி, மொழி பெயர்ப்பாளர் சரியாகத்தான் மொழி பெயர்த்துள்ளார்என்றார் நீதிபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+